மதுரை, டிச.31- தமிழ்நாடு அனைத்து மருந்தா ளுநர் நல கூட்டமைப்பு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயவீரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் மதுரை நகர் மாவட்ட செயலாளர் அ. பாஸ்கரன், மதுரை புறநகர் மாவட்ட செய லாளர் அ. தமிழ்ச்செல்வி ஆகி யோர் விளக்கிப் பேசினர். எம். ஆர்.பி.செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர் ராஜீ, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் ம. தேவேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் க.நீதிராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாநில செயலாளர் தூ.முருகன் சிறப்புரையாற்றினார். சண்முக சுந்தர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பட்டய மருந்தாளுநர்களின் வேலை வாய்ப்பு உரிமையை பறிக்கக் கூடாது. பி.பார்ம் பட்டதாரி மருந்தாளுநர்களுக்கு அரசு துறையில் வேலை வாய்ப்பு என்பது பல வழிகளில் உள்ளது. ஆனால் அரசுத்துறையில் பட்டய மருந்தாளுநர்களின் வேலை வாய்ப்பு அரசு மருத்துவமனை யில் பணி புரிய மட்டுமே வாய்ப்பு உள்ளது. எனவே அரசு மருத்துவமனை யில் பணி புரிய பட்டய மருந்தா ளுநர்கள் (D. Pharmacy) கல்வி தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய அரசு தலையிட்டு நீதிமன்ற வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.