திண்டுக்கல், ஜுலை 1- பழனியில் சமீபகால மாக நடைபெறும் சனாதன சக்திகளின் அராஜகச் செய லுக்கு அனைத்துக்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரி வித்தனர். கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். பழனியில் சாதிமத பேத மின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலை யில் பழனி மலைக்கோவி லுக்கு இந்து மதத்தைச் சேர்ந் தவர்கள் தவிர யாரும் வரக் கூடாது என்றும் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்துமுன்னணி உள்ளிட்ட பல சங்பரிவார் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து பழனி மலை கோவில் பாது காப்பு பேரவை என்று வைத் துக்கொண்டு திருக்கோவில் அடிவாரத்திலும் கோவில் வளாகத்திலும், அறநிலை யத்துறை அலுவலகத்திற் குள்ளும் சென்று போராட்டங் களில் ஈடுபட்டு வருகிறார் கள். இவர்களின் இந்த அத்து மீறிய செயலால் பக்தர்கள், பொதுமக்கள், அச்சமடைந் துள்ளனர். பழனியில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து மத துவேஷ நடவடிக்கை யில் ஈடுபடும் இத்தகைய அமைப்புகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அமைதியை பாது காக்க முன்வர வேண்டும். இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராகவும் பழனி முருகன் கோவிலை மதத் தின் பெயரால் கைப்பற்ற நினைக்கும் இந்த சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சியினர் வலி யுறுத்தினர்.
மேற்கண்ட கோரிக்கை கள் அடங்கிய மனு பழனி கோட்டாட்சியர். வட்டாட்சி யர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், கோவில் இணை ஆணையர் ஆகி யோரிடம் கொடுக்கப்பட் டது. மனு கொடுக்கும் நிகழ் வில் சிபிஎம் முன்னாள் நகர் மன்ற தலைவரும், மாவட் டச்செயற்குழு உறுப்பினரு மான வி.ராஜமாணிக்கம், நகர்மன்ற துணைத்தலைவ ரும் சிபிஎம் நகரச்செயலாள ருமான கே.கந்தசாமி, இந் திய கமயூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலாளர் கௌசல்யா, தொப்பம்பட்டி ஒன்றியச்செயலாளர் சிவ ராஜ், இந்திய தேசிய காங்கி ரஸ் கட்சியின் நகரத்தலை வர் முத்து விஜயன், மாவட் டத் துணைத்தலைவர் மாரிக் கண்ணு, விடுதலைச்சிறுத் தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொதினிவள வன், நகரப் பொருளாளர் தமி ழவன். ஓன்றியச்செயலாளர் ஜெயசீலன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழ கத்தின் சார்பில் நகரத்தலை வர் முகமது ரஃபீக், துணைத் தலைவர் ராஜாமுகமது, திரா விடர்க கழக நகரத்தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். (நநி)