மதுரை, பிப். 16- மதுரை அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க 44 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப் பட்டுள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கா் நிலம் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடமானது மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை வணிகவரித்துறை அமைச்சர், சுற்று லாத் துறை அதிகாரிகள், பொதுப் பணி துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த இடத்தில் ஜல்லிக் கட்டு அரங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வசதிகள் உள் ளிட்டவை குறித்து ஆய்வு செய்து நான்கு மாதங்களுக்குள் விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றது இந்த நிலையில் சுமார் 44 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தளங்களைக் கொண்ட கட்டிடம் 7212சமீ கட்டிடம் மற்றும் அரங்கம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது 5 ஆயிரம் பேர் ஜல்லிக்கட்டை காணும் வகையிலும், தற்காலிகமாக 20 ஆயிரம் பேர் காணும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது மட்டுமல்லாமல் ஜல்லிக் கட்டு வீரர்களுக்கு ஓய்வறை, நிர்வாக அலுவலகம், அவசர சிகிச்சை மையம், காத்திருப்போர் அறை, தொலைக் காட்சி நிருபர்களுக்கான தனி அறை, காட்சிக்கூடம் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது, இந்த கட்டுமான பணியை மேற் கொள்ள விரும்பும் ஒப்பந்த நிறுவ னங்கள் வருகின்ற 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பொதுப் பணித்துறை தரப்பில் தகவல் தெரி வித்துள்ளனர் இது மட்டுமில்லாமல் இரண்டு ஆண்டுகளுக்குள் பணியும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்ட மிடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மதுரையில் கலாச்சார மையமாகவும் ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் வகையில் இந்த அரங்கம் அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.