மதுரை, ஜூலை 26- மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாண வர்கள் சங்கம் சார்பில் உள் விளையாட்டு அரங்கத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் செவ்வாயன்று திறந்து வைத்தார். இதில் நிதி-மனிதவள மேலாண்மைத்துறை அமைச் சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித்துறை-பத்தி ரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, மருத்துவக் கல் லூரி முதல்வர் ரத்தினவேல், டாக்டர் மருதுபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் மு. பூமிநாதன், ஆ. வெங்கடேசன், மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் தி. நாகராஜன் ஆகி யோர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், தமி ழகத்தில் துவங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட் டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த ஒன்றிய அரசு தமிழக சுகாதாரத்துறை யிடம் விவரங்களை சேக ரித்துள்ளது மதுரை அரசு மருத்துவ மனையில் திறக்கபட்ட எலும்பு வங்கியில் 36 எலும்புகள் பெறபட்டுள் ளன. இறந்த இரண்டு நபர் களிடம் இருந்து எடுக்கபட்ட எலும்புகள் மூலம் 7 பேர் பயனடைந்துள்ளனர் போலீஸ் மற்றும் விளை யாட்டு வீரர்கள் இந்த சிகிச்சை மூலம் பயனடைந் துள்ளனர் மதுரை அரசு மருத்துவ மனையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டண படுக்கை மையம் அமைக்கப்பட உள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டிட வடிமைபிற்கான டெண் டர் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வரைபடம் தயா ரித்து எய்ம்ஸ் அமைய வுள்ள இடத்தில் காட்சிப் படுத்தப்பட உள்ளது. எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் துவங்கிவிடும் என்று தெரி வித்தார்.