districts

img

பெரியகுளத்தில் 182 அரசு நிலம் அபகரிப்பு விவகாரம் அதிமுக நிர்வாகி,அரசு அலுவலர்கள் 2 பேரை சிபிசிஐடி கைது செய்தது

தேனி,பிப்.3- பெரியகுளத்தில் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்ட மெகா மோசடி வழக்கில் அதிமுக நிர்வாகி அன்னபிரகாஷ், நில  அளவையர், கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் ஆகிய மூன்று பேரை சிபிசிஐடி போலீ சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியகுளம் வட்டத்தில்  வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரியகுளம் அதி முக முன்னாள் ஒன்றிய செயலா ளர் அன்னபிரகாஷ் மற்றும் தனி நபர்கள் சிலர் அபகரித்து தங்க ளின் பெயரில் பட்டா பெற்றனர். இதற்கு  உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டனர். மோசடியாக வழங் கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய் யப்பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாக மாற்றப்பட் டன.

மேலும், பெரியகுளம் சப்- கலெக்டர் ரிஷப் கொடுத்த புகார் களின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய ஆனந்தி, ஜெயப்பிரிதா, தாசில் தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ண குமார், மண்டல துணை தாசில் தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீர நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவை யரின் உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஷ் கண்ணன், நிலத்தை அபகரித்த அன்னப்பிர காஷ், முத்துவேல் பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் உள்பட பலர் மீது  மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வந்தனர். அதனைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க சிபி சிஐடி காவல்துறைக்கு மாற்றி காவல்துறை தலைவர் சைலேந்தி ரபாபு ஆணையிட்டார் .

இதனைத் தொடர்ந்து  சிபிசிஐடி துணை கண் காணிப்பாளர் சரவணன், குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சுந்தராஜனிடம் வழக்கு தொடர் பான ஆவணங்களை பெற்று, விசாரணையை நடத்தினர் . இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் அதிமுக பிரமுகரான முன்னாள் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், நில அளவையர் பிச்சைமணி,  பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் அழகர் ஆகியோரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.  கைது செய்யப்பட்ட 3 பேரையும் சிறையில் அடைப்பதற்கான நட வடிக்கைகளை சிபிசிஐடி போலீ சார் மேற்கொண்டு வருகின்ற னர்.