திருவில்லிபுத்தூர்,டிச.7- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திருவில்லிபுத்தூர் ஒன்றிய 10 ஆவது மாநாடு பிள்ளை யார் குளம் ஊராட்சி கங்கா குளத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு பொன்மாரி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சி.ஜோதிலட்சுமி துவக்கி வைத்துப் பேசினார். ஒன்றிய செயலாளர் கே பாலச்சாமி அறிக்கை சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பி னர் வி. சந்தனம் வாழ்த்திப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.கே.பழனிச்சாமி நிறைவுரையாற்றினார். ஒன்றியத் தலைவராக கே.சின்னத்தம்பி, செயலா ளராக கே .பால்ச்சாமி, பொருளாளராக மாரியம்மாள் உட்பட 13 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப் பட்டது.