தேசுனி,பிப்.3- விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாட்டினை முன்னிட்டு மறைந்த தோழர் எஸ்.மொக்கராஜ் நினைவாக கூடலூரிலிருந்து ஜோதி பயணம் துவங்கி யது. அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் 10 ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் பிப்ரவரி 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சங்கத்தின் மாநில நிர்வா கியாக இருந்து திறம்பட பணியாற்றி மறைந்த தோழர் எஸ் .மொக்கராஜ் நினை வாக ஜோதி பயணம் கூடலூ ரில் துவங்கியது .இந்நிகழ்ச் சிக்கு சங்கத்தின் கூடலூர் ஏரியா நிர்வாகி எஸ். உசேன் தலைமை வகித் த்தார்.தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கே .ராஜப்பன், தோழர் எஸ்.மொக்கராஜ் நினைவு ஜோதியை சங்கத்தின் மாநிலச்செய லாளர் ஏ.வி அண்ணாமலை யிடம் வழங்கினார் . இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடே சன், சங்க மாவட்ட செயலா ளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, ஏரியா செயலாளர் பி.ஜெய ராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் மணி கண்டன் மற்றும் நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.