பழனி, அக்.16- அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் ஒட்டன்சத்திரம் ஒன்றிய மாநாடு சத்திரப்பட்டியில் ஒன்றியத் தலைவர் ஆர்.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி சங்கக்கொடி யை ஏற்றிவைத்தார். ஒன்றியச் செயலாளர் பி.முரு கேசன் வேலையறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன், மாவட்டத் தலைவர் பி. வசந்தாமணி ஆகியோர் உரையாற்றினர். விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் எம்.கருணாகரன், ஒன்றியச் செய லாளர் எஸ்.மனோகரன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.சிவமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் ஒன்றியத் தலைவராக ஆர். ஆறுச்சாமி, ஒன்றியச் செயலாளராக பி. முருகேசன், ஒன்றிய பொருளா ளராக டி. முருகேஸ்வரி உட்பட 15 பேர் கொண்ட ஒன்றி யக்குழு தேர்வு செய்யப்பட்டது. நூறுநாள் வேலையை முழுமையாக அனைவருக்கும் வழங்க வேண்டும். திட்ட நிதியை கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கக்கூடாது. தொகுப்பு வீடு கட்ட மாநில அரசு ரூ.5 லட்சம், ஒன்றிய அரசு ரூ.5 லட்சம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.