திண்டுக்கல், நவ.1- வடமதுரை ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று விவசாயத் தொழிலாளர் சங்க வடமதுரை ஒன்றிய மாநாடு வலியுறுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வடமதுரை ஒன்றிய மாநாடு திங்களன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு எம்.கே.சம்சுதீன் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் ஏ. லாசர் சிறப்புரையாற்றினார். மாவட்டச்செயலாளர் கே. அருள்செல்வன், மாவட்டத்தலைவர் பி.வசந்தாமணி, முன்னாள் மாவட்டச்செயலாளர் சி.குணசேகரன், சிபிஎம் ஒன்றியச்செயலாளர் எம்.மலைச்சாமி ஆகியோர் பேசினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். ஒன்றியத்தலைவராக எம்.முருகன், செயலாளராக சி.மருதை, பொருளாளராக எம். மீனாட்சி சுந்தரம் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வடமதுரை ஒன்றியத்தில் விவசாயத் தொழிலாளர் களுக்கு 100 நாள் வேலை தொடர்ந்து வழங்குவதில்லை. ஒரு மாதத்தில் 6 நாட்கள் மட்டுமே வேலை வழங்கு கிறது ஒன்றிய நிர்வாகம். இதற்கு மாநாடு கண்டனம் தெரி விப்பதோடு ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க ஒன்றிய நிர்வாகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. (ந.நி.)