districts

img

விவசாயத்தொழிலாளர் சங்க மதுரை மேற்கு ஒன்றிய மாநாடு

மதுரை, நவ.24- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் மதுரை மேற்கு ஒன்றிய 10 ஆவது கோரிக்கை மாநாடு வியாழனன்று பாசிங்காபுரத்தில் நடை பெற்றது.   மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர்  வி. பச்சை யப்பன் தலைமை வகித்தார். மாவட்டத்  தலைவர் வி. உமாமகேஸ்வரன் துவக்கி வைத்துப் பேசினார். ஒன்றிய செயலாளர் எஸ். நாகராஜன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பி.நாகேந்திரன் வாழ்த்திப் பேசினார்.  மாவட்ட செயலாளர் சொ. பாண்டியன் நிறைவுரையாற்றினார்.   புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியத் தலைவராக வி.பச்சயப்பன், ஒன்றியச் செயலாளராக து. ராமமூர்த்தி, பொருளாளராக எஸ். நாகராஜன்  துணைத் தலைவராக பழனி, துணைச் செயலாளராக மகேந்திரன் உட்பட 15பேர் கொண்ட ஒன்றியக் குழு  தேர்வு செய்யப்பட்டது.  மதுரை மேற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை முழு மையாக வழங்க வேண்டும்.  60வயது முடிந்த விவ சாய தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயி ரம் வழங்க வேண்டும்.  வீடு இல்லாத விவசாய தொழி லாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், வீடு  கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்க வேண்டும்.  100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி கூலி ரூ.600 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.