காரியாபடடி ஜூலை 15- காரியாபட்டி அருகே 100 நாள் வேலை வழங்க மறுத்த ஊராட்சி நிர்வா கத்தை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், காரியா பட்டி வட்டத்திற்கு உட்பட்டது நாசர் புளியங்குளம் கிராமம் ஊராட்சி. இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், திடீனெ 100 நாள் தர ஊராட்சி நிர்வாகம் மறுத்துள் ளது. எனவே, தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க மறுத்த ஊராட்சி நிர்வா கத்தை கண்டித்தும், தொடர்ந்து 100 நாள் வேலை வழங்கக் கோரியும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். முடிவில், தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டம் முடி வுக்கு வந்தது. முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வட்ட செயலா ளர் பி.மலைச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் ஏ.அம்மாசி, சதுரகிரி உட்பட பலர் பங்கேற்றனர்.