இராமநாதபுரம், ஜூலை 5- எவ்வித நிபந்தனையும் இன்றி விவ சாயத் தொழிலாளர்கள் அனைவருக் கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் .இயற்கை மர ணத்திற்கு ரூ.3 லட்சம், விபத்து மரணத் திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி களுக்கு விஸ்திரிப்பதுடன தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும் .அனைத்து பகுதி மக்களுக்கும் காவிரி கூட்டுக் குடி நீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய-மாநில அரசு கள் நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங் கத்தின் சார்பில் இராமநாதபுரம் மாவட் டம், முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பாக பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாச் செய லாளர் அங்குதன் தலைமை வகித்தார். சங்க மாநிலச் செயலாளரும் சிபிஎம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பி னருமான எம்.சின்னத்துரை சிறப்புரை யாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் வி.காசிநாததுரை, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் என்.கலையரசன், மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட துணைச் செயலா ளர் முருகன் ஆகியோர் பேசினர். தாலுகா தலைவர் சண்முகையா பொரு ளாளர் சுரேந்திரன் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் உட்பட விவசாய தொழி லாளர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக ஓய்வூதியம் தொடர் பான கோரிக்கை மனுக்களை பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கவனத் திற்கு கொண்டு செல்லும் வகையில் சட்டமன்ற அலுவலகத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் கணேசன் மற்றும் வட்டாட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரை மற்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.