ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா இன்று துவக்கம்
இராமநாதபுரம், மே 20- இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவின் முதல் நிகழ்ச்சி மே 21 அன்று தொடங்குகிறது. மே 31 அன்று பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்புமிகு கொடியேற்றமும்,முக்கிய நிகழ்ச்சி யாக உரூஸ் எனும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12 அன்று மாலை தொடங்குகிறது. ஜூன் 19 அன்று நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை தர்ஹா ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
இராமேஸ்வரம்: ரூ. 50 லட்சம் மதிப்பில் கடல் அட்டை பறிமுதல்
இராமேஸ்வரம், மே.20- இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இருந்து கடல் அட்டை கடத்தவிருப்பதாக மண்டபம் கட லோர பாதுகாப்பு குழும காவல்துறை ஆய்வாளர் கனக ராஜ்க்கு சனிக்கிழமையன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, கனகராஜ் தலைமையில் இராமேஸ்வரம் சேரங்கோட்டை மீனவ கிராமத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது லிங்கம் என்பவ ரது வீட்டை சோதனையிட்ட போது பதப்படுத்தி வைக்கப் பட்டிருந்த 550 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப் பட்டது. இந்த கடல் அட்டை இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்கு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் கடல் அட்டைகளை பதுக்கிய லிங்கம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கடல் அட்டைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீரபாண்டி வேலைவாய்ப்பு முகாமில் 130 பேருக்கு பணி நியமன ஆணை
தேனி, மே 20- வீரபாண்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடை பெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, கல்லூரியில் இறுதியாண்டு மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 15 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, அந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தேவையான நபர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்தன. அதன்படி, வீரபாண்டி அரசு கலை மற்றும் அறவியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டதில், தனியார் துறை நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 130 மாணவ, மாணவியர்களுக்கு பணி நிய மன ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வின் போது, வீரபாண்டி அரசு கல்லூரி முதல்வர் முனைவர் உமாதேவி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அ.நாராயணமூர்த்தி, கல்லூரி பேரா சிரியர்கள் முனைவர் ராமர், ஸ்டாலின், பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10 ஆம் வகுப்புத் தேர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் 91.77% தேர்ச்சி
திண்டுக்கல், மே.20- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட் டத்தில் 91.77 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி 92.79 சதவீதம் ஆகும். திண்டுக்கல், பழனி ஆகிய 2 கல்வி மாவட்டங்க ளைச் சேர்ந்த 11,997 மாணவர்கள், 12,289 மாணவி கள் என மொத்தம் 24,286 மாணவ மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதினர். இதில் 10 ஆயி ரத்து 680 மாணவர்களும் 11 ஆயிரத்து 607 மாணவி களும் என மொத்தம் 22,287 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 91.77 சதவீதம் தேர்ச்சி ஆகும். மாணவர்கள் 89.02 சதவீதமும், மாணவிகள் 94.45 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 30 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி 106 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. அதில் அரசு பள்ளிகளில் மட்டும் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் மாநிலத்தில் தரவரிசை பட்டியலில் திண்டுக்கல் 19-வது இடத்தை பிடித்துள்ளது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல், பழனி, ஆகிய 2 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 8,791 மாணவர்கள், 10698 மாணவிகள் என மொத்தம் 19,489 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7 ஆயிரத்து 839 மாணவர்களும் 10 ஆயிரத்து 245 மாணவிகளும் என மொத்தம் 18,084 மாணவ மாணவி கள் தேர்ச்சி பெற்றனர். இது 92.79 சதவீத தேர்ச்சி ஆகும். மாணவர்கள் 89.17 சதவீதமும், மாணவிகள் 95.77 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். பழங்குடியினர் பள்ளி 100% தேர்ச்சி திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடி மாணவர் பள்ளியில் பயின்ற 12 மாணவர்கள், 11 மாணவியர்கள் என மொத்தம் 23 பேர் தேர்வு எழுதினர். இந்த 23 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் பள்ளியில் பயின்ற 28 மாணவர்கள், 18 மாணவிகள் என 46 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 42 பேர் தேர்ச்சி பெற்றனர். 91.30 சதவீதம் தேர்ச்சியாகும். கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 228 மாணவர்கள், 179 மாணவியர்கள் என மொத்தம் 407 தேர்வு எழுதி னர். இதில் 366 பேர் தேர்ச்சி பெற்றனர். 89.93 சதவீதம் தேர்ச்சியாகும். அரசு பள்ளிகளில் 4639 மாணவர்களும், 5082 மாணவியர்களும் என 9721 பேர் தேர்வு எழுதினர். இதில் 8516 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.57 சதவீத தேர்ச்சி ஆகும். நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 239 மாணவர்களும், 14 மாணவிகளும் என 253 பேர் தேர்வு எழுதினர். இதில் 211 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.40 சதவீதம் தேர்ச்சி ஆகும்.