மதுரை, ஜன.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசனின் கோரிக்கை யை ஏற்று, ஒன்றிய அரசு ஊழியர் களுக்கான பயன்பாட்டு பட்டியலில் சித்தா, யுனானி சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: கடந்த 2021 முதல் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ பயன்பட்டு திட்டத்தில் ஆயுர்வேதா , யோகா, மற்றும் நேச்சுரோபதி மருத்துவ முறைகளுக்கு “தின பரா மரிப்புக்கு திட்டம்”( Day care) வகுக்கப்பட்டு அதற்கான மையங்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கி றது. இந்த சலுகை சித்தா, யுனானி சிகிச்சைகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இது குறித்து ஒன்றிய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மான்சுக் மாண்ட வியாவுக்கு ஜூன் 2, 2022 அன்று கடி தம் எழுதி இருந்தேன். ஜனவரி 3 அன்று ஒன்றிய நல்வாழ் வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண் டவியா ள் “தின பராமரிப்பு சிகிச்சை” திட்டத்தில் இனி சித்தா ,யுனானி சிகிச்சைகளுக்கும் வழி வகை செய்யப்பட உள்ளது; அதற்கான நெறி மற்றும் வழிகாட்டுதல் தயாரிக்கப் பட்டு வருவதாக தன் 28.12.2022 தேதி யிட்ட கடிதம் வாயிலாக உறுதி அளித் துள்ளார். அமைச்சருக்கு நன்றி. இப்பயன் விரைவில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.