கொரோனா காலத்தில் மூடப்பட்டிருந்த என்டிசி நூற்பாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக பரமக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வெங்கடசுப்பிரமணியன், சங்க நிர்வாகி கணேசன், ஏஐடியுசி சிவக்குமார், ஏடிபி முருகன், டாக்டர் அம்பேத்கர் சங்க நிர்வாகி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.