districts

img

விவசாயத்தில் ஈடுபடும் சிறைவாசிகள்: பழங்கள் சாகுபடி செய்து சாதனை

மதுரை, மார்ச் 7-  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 84 ஏக்கரில் 100 சிறைவாசி கள் மூலம் வாழை,தென்னை நெற்பயிர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது,  சிறை நிர்வாகத்தின் வருமானத்தை பெருக்கும் நோக்கோடு பழங்கள் விவ சாயமும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முதல்முறையாக திறந்தவெளி சிறைச் சாலையில் பயிரிடப்பட்ட சுமார் இரண்டு டன் தர்ப்பூசணி பழங்கள் மதுரை மத் திய சிறைச்சாலை வாயிலில் உள்ள அங் கன்வாடி மையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  தர்ப்பூசணி சந்தை மதிப்பை விட 30 முதல் 40 சதவீதம் குறைவான விலைக்கு சிறை நிர்வாகம் மூலம் விற் பனை செய்யப்பட்டு வருகிறது, தொட ர்ந்து  கொய்யா, மா எலுமிச்சை உள்ளிட்ட பழங்களும் விற்பனை செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.