districts

img

சாதித்த மதுரை மாநகராட்சிப் பள்ளிகள்; சளைக்காத அரசுப்பள்ளிகள்

மதுரை, மே 8- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை மாநக ராட்சிப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து பெருமை சேர்த்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பன்னி ரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை  34 ஆயிரத்து 751 பேர். (17,092 பேர்  மாணவர்கள், 17,659 பேர் மாணவி கள்) திங்களன்று முடிவுகள் வெளி யான நிலையில்   மாணவர்கள் 15,998 (93.60 சத வீதம்), மாணவிகள் 17,306 (98 சத வீதம்) என மொத்தம்  மொத்தம் 33  ஆயிரத்து 304 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். மொத்தத் தேர்ச்சி 95.84  சதவீதம்.  மதுரை மாநகராட்சிக்கு உட்  பட்ட 16 மாநகராட்சி பள்ளிகளில் இருந்து சுமார் 673 மாணவர்கள், 1,597 மாணவிகள் என மொத்தம் 2,270 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 1,526  மாணவிகள்,  574 மாணவர்கள் என மொத்தம் 2,100 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  நாவலர் சோமசுந்தரம் பாரதி யார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி  99.30 சதவீதம் பெற்று முதலி டம், பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.39 சதவீதம் பெற்று இரண்டாவது இடம், கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 97. 96 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாவது இடம்  பெற்றுள்ளது.

 மாநகராட்சிப் பள்ளிகளில் ஒரு  படத்தில் 100 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 42 பேர்.   வேதியியல் பாடத்தில் ஒரு மாணவர்,  விலங்கி யல் பாடத்தில் ஒரு மாணவர், கணினி அறிவியலில் ஐந்து மாண வர்கள்,  வரலாறு பாடத்தில் இரண்டு  மாணவர்கள், புவியியல் பாடத்தில் ஒரு மாணவர், பொருளியல் பாடத்  தில் ஒரு மாணவர்,  வணிகவியலில் ஏழு மாணவர்கள், கணக்கு பதிவி யலில் 12 மாணவர்கள், கணினிப் பயன்பாட்டில் எட்டு மாணவர்கள் தட்டச்சில் நான்கு மாணவர்கள் என மொத்தம் 42 மாணவர்கள்  நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.   இதில் ஈ.வெ.ரா. மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி  மாணவிகள் பத்து பேர் இதர  பாடங்களில் நூறு மதிப்பெண் ணும், வெள்ளி வீதியார் மதுரை  மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் நான்கு  பேர் தட்டச்சு தேர்வில் 100 மதிப் பெண் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிதிராவிடர் நலப்பள்ளியிலி ருந்து 117 பேர் தேர்வெழுதியிருந்த னர். இவர்களில் 114 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கள்ளர் சீரமைப்பள்ளிகளைச் சேர்ந்த 984 மாணவர்களில் 946 பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதுமுள்ள அர சுப்பள்ளிகளைச் சேர்ந்த 7,711 பேர்  தேர்வெழுதியிருந்தனர். இவர் களில் 7,030 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். சமூக நலத்துறை பள்ளியிலி ருந்து தேர்வெழுதிய 17 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மாவட்டம் பன்னி ரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில்  மாவட்டங்களிலேயே 15-ஆவது இடத்தில் உள்ளது.