districts

img

சீர்காழி, நாகர்கோவிலில் விபத்து: எட்டுப் பேர் உயிரிழந்தனர்

சீர்காழி/நாகர்கோவில், மே 12- சீர்காழி, மற்றும் நாகர் கோவிலில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் எட்டு பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். மயிலாடுதுறை மாவட் ்டம், சீர்காழி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து மோதிய விபத்தில் நான்கு பேர் உயி ரிழந்தனர், 26 பேர் காயம டைந்தனர். இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது: சீர்காழி புறவழிச்சாலையில் காரைக்குடி கட் ரோடு அருகே, திருத்துறைப் பூண்டியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து, முதலில் சாலையோரம் நின்றிருந்த டேங்கர் மீது மோதி, பின்னர் இருசக்கர வாகனம் மீது மோதியது என்றனர்.

இந்த விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த எம்.பாலமுருகன், எஸ்.பத்ம நாபன், பி.அருள்ராஜ் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட் டத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் ஜி.விஜய சாரதி சீர்காழி அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 26 பயணிகளை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் பலத்த காயமடைந்த ஐந்து பேர் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றொரு விபத்து வெள்ளிக்கிழமை அதி காலை நாகர்கோவில் அருகே நடந்த சாலை விபத் தில் இசைக் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் உயிரி ழந்தனர், மேலும் எட்டு பேர்  படுகாயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட் டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த இசைக்குழுவினர் 12 பேர் வியாழக்கிழமை இரவு திருநெல்வேலியில் நிகழ்ச்சி முடித்து  வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள் ளனர். நாகர்கோவில் அருகே வெள்ளமடம் அருகே உள்ள சந்திப்பை அதிகாலை 6.30 மணியளவில் கடந்தபோது, எதிரே வந்த தமிழ்நாடு அர சுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மீது இசைக்குழு வினர் சென்ற வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத் துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரி ழந்தார். உயிரிழந்தவர்கள் விவரம்: திருவட்டார் பகு தியைச் சேர்ந்த நடனக் கலை ஞர் சதீஷ் (37), அஜீத் (25), சிஞ்சு (17) மற்றும் அரு மனைப் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கண்ணன் (24).