districts

img

தலித் மாணவர் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்

தேனி, ஆக.17- நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் தலித் மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை மீது  கொலை வெறி தாக்குதல் நடத்திய சிறுவர்களுக்கு சாதி உணர்வை தூண்டி யவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தலித் மற்றும் பழங்குடியினர் மீது அதிக ரிக்கும் சாதிய வன் கொடுமை களுக்கு முடிவு கட்ட வேண்  டும். எஸ்சி / எஸ்டி மாவட்ட விழிக்கண் குழுவின் செயல்  பாட்டை தீவிரப்படுத்த வேண் டும் என்று வலியுறுத்தி தமிழ்  நாடு தீண்டாமை ஒழிப்பு முன்  னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. தேனி அல்லிநகரத்தில் நடைபெற்ற போராட்டத் திற்கு தேனி மாவட்ட தலை வர் டி.கே.சீனிவாசன் தலை மை வகித்தார் .மாவட்ட செய லாளர் இ.தர்மர் முன்னிலை  வகித்தார் .மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு தொடக்கி  வைத்து பேசினார் . மாதர் சங்க தேனி மாவட்ட செயலா ளர் சித்ரா, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு  வடிவேல், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பூ.மணி கண்டன், கிறிஸ்தவ மக்கள் நல பேரமைப்பு தலைவர் சம்மட்டி நாகராஜ் ,வெல்பர் பார்ட்டி அமைப்பாளர் முக மது சபி ,ஆதித்தமிழர் கட்சி  மாவட்டச் செயலாளர் மா. முல்லை அழகர் ,ஆதித்தமி ழர் பேரவை மாவட்டச் செய லாளர் பெ.சுரேஷ் ஆகி யோர் உரையாற்றினர். மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர்  ஏ.வி.அண்ணாமலை நிறை வுரையாற்றினார். விவசாயிகள் சங்க மாநி லக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன், மாவட்ட செயலா ளர் டி.கண்ணன் ,வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி.முனீஸ்வரன் ,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட  செயலாளர் எல்.ஆர்.சங்கர சுப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி கள் கலந்து கொண்டனர் 

சிவகாசி

சிவகாசியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் ராமகுமார் தலைமை தாங்கினார். பா.குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலா ளர் கே.முருகன் துவக்கி வைத்துப் பேசினார். மாநி லக்குழு உறுப்பினர் எஸ். லட்சுமி கண்டன உரை யாற்றினார். இதில், ஆதித் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்புராஜ், மேற்கு மாவட்ட தலைவர் ராஜ், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.  ஒட்டன்சத்திரம்  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் கே.அருள்செல்வன் தலை மையேற்றுப் பேசினார். மாவட்ட செயலாளர் கே.டி.கலைச்செல்வன், மாதர் சங்கம் மாநிலச் செய லாளர் ஜி.ராணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் முத்து சாமி, பொருளாளர் ஆர். வனஜா, மாவட்ட நிர்வாகி கள் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.