இராமநாதபுரம், ஏப்.24- இராமநாதபுரம் மாவட் டம் அபிராமத்தில் வாரச் சந்தை செயல்பட்டு வரு கிறது. இங்கு முறையாக வசூ லிக்கப்படும் கட்டணத்திற்கு ரசீது வழங்குவதில்லை. ரசீது கேட்டால் குத்தகை தாரர் தங்களை மிரட்டுவதாக குற்றம்சாட்டி அபிரராமம் வாரச்சந்தை வியாபாரிகள் (சிஐடியு) திங்களன்று சந்தை புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கமுதி வட்டாட்சியர், அபிராமம் பேரூராட்சி செயல் அலுவ லர் பேரூராட்சி மண்ற உறுப்பினர்கள், சந்தை குத்த கைதாரர் ஆகியோர் முறை சாரா தொழிலாளர் (சிஐடியு) சங்க மாவட்டச் செயலாளர் இரா.முத்துவிஜயன், சந்தை வியாபாரிகள் சங்கத் தலை வர் எம்.ராமு, செயலாளா் அண்ணாதுரை, பொரு ளாளர் ஆலடிஸ்வரன், சேசு, நாகராஜ் உட்பட வியாபாரி கள் 200 பேருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப் போது கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி துணை ஆட்சியர் முன்னிலையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர். தொடர்ந்து இது தொடர்பான தயா ரான ஒப்பந்தத்திலும் வியா பாரிகள் கையெழுத்திட்ட னர்.