மதுரை, ஜூன். 13- நூறு ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த ராய புரம் ரயில்வே அச்சகத்தை மூடும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். 3 லட்சம் காலியிடங்களை, குறிப்பாக ஒன்றே முக்கால் லட்சம் பாதுகாப்பு சம்பந்த மான காலியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த கேட் கீப்பர்களாக நிய மிப்பதை நிறுத்த வேண்டும். பொதுப்பிரிவுக்கான பதவி உயர்வு (GDCE) தேர்வினை உடனடியாக நடத்திட வேண் டும் என்று வலியுறுத்தி செவ் வாயன்று மதுரையில் டிஆர்இயு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மேற்கு நுழைவு வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் என். கார்த்திக் சங்கிலி தலைமை வகித்தார். கோட்ட பொரு ளாளர் பி. சரவணன், துணை பொதுச்செயலாளர் எம்.சிவக்குமார், கோட்ட உதவி தலைவர் எம். ஜெயராஜ சேகர், கோட்ட இணை செய லாளர் ஆர்.சங்கர நாராய ணன், ஏஐஎல்ஆர்எஸ்ஏ கோட்ட துணை தலைவர் ஆர்.கண்ணன் ஆகியோர் பேசினர். கோட்ட துணை தலைவர் பா. வினோத் பாபு மற்றும் பலர் பங்கேற்றனர்.