தேனி, நவ.10- சின்னமனூர் ஒன்றி யத்தில் 2500 ஏக்கர் பாசன விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை கணக்கில் கொண்டு பாசன நிலத்திற்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் ஏ.லாசர் கோரிக்கை விடுத்துள்ளார். விளை நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களை உடைத்த அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயி கள் வாழ்வாதாரத்தை பாது காக்க தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்க வலி யுறுத்தி தேனி மாவட்ட்ம் சின்னமனூர் அருகே ஓடைப் பட்டியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற் றது. கூட்டத்திற்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ்.தாதையன் தலைமை வகித்தார்.பி.பழனிராஜ் முன்னிலை வகித்தார்.விவ சாய தொழிலாளர் சங்க மாநி லத்தலைவரும் பெரிய குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான ஏ.லாசர் சிறப்புரை யாற்றினார்.மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்டச்செயலாளர் டி. கண்ணன், ஒன்றிய செயலா ளர் எம்.மணிகண்டன் , மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம் ஆகியோர் பேசி னர்.மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன் ,ஒன்றிய தலைவர் பி.சேகர், பொரு ளாளர் ஜெயபாரதி எஸ்.கே. முருகேசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு ஏ.லாசர் பேசியதாவது: சின்னமனூர் முல்லைப் பெரியாறு பகுதியில் விவ சாயிகள் பட்டா நிலங்களில் கிணறு அமைத்து, அதில் இருந்து எடுக்கப்படும் தண் ணீரை குழாய் மூலம் பூமிக்கு அடியில் பதித்து சின்னம னூரை ஒட்டியுள்ள ஓடைப் பட்டி வெள்ளையம்மாள் புரம், தென்பழனி, சீப்பா லக்கோட்டை, எரசக்க நாயக்கனூர் உள்ளிட்ட பகு திகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்கின் றனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் மூலம் வாழை, திராட்சை, தென்னை உள்ளிட்ட பயிர் கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் நெடுஞ்சா லைத்துறையினர், பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் விவசாயிகள் அனு மதி இல்லாமல் தண்ணீர் கொண்டு செல்வதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் குழாய்களின் இணைப்பை துண்டித்தனர். இதனால் 2500 ஏக்கரில் வாழை, திராட்சை உள்ளிட்ட விவசாய பயிர்கள் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் இன்றி காய்ந்து வரு கின்றன. இது விவசாயி களின் முதுகெலும்பை உடைப்பதற்கு சமம். விவ சாயிகள், விவசாய தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் சீர ழிக்கப்படுகிறது. ஓடைப் பட்டியின் விளைந்த வாழை சர்வதேச அளவில் விருது பெற்று மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. வறண்ட, தரிசு நிலங்களை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத் தும் நிலையில் விவசாயிகள் கூட்டாக சேர்ந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதை அதிகாரிகள் உடைத்ததை ஏற்கமுடி யாது. இவ்வாறு அவர் பேசி னார்.