districts

img

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளியை 60 ரூபாய்க்கு விற்ற வியாபாரி

திண்டுக்கல், ஜூலை 28- திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்பட்டது. பொதுமக்கள் மகிழ்ச்சி யுடன் வாங்கிச்சென்றனர்.  திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கனி மார்க்கெட்டில் திண்டுக்கல்  மற்றும் வெளி  மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகளை பொதுமக்க ளும்,  வியாபாரிகளும் வாங்க வருகை தருவது வழக்கம். இந்த மார்க்கெட்டில் 20 ஆண்டுகளாக தக்காளி வியாபா ரம் செய்து வரும் சந்தோஷ் என்பவர் தினசரி 50 டன்  தக்காளி  மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து மொத்தம் மற்றும் சில்லறையாக  விற்பனை செய்து வருகிறார். சமீப காலமாக மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. மேலும் தமிழ்நாட்டில் தக்காளி உற்பத்தி இல்லாத  காரணத்தால் முழுக்க முழுக்க வெளி மாநில தக்காளியை நம்பி இருந்த தமிழ்நாட்டில் உள்ளூர் தக்காளிகளுக்கு கிராக்கி ஏற்பட்டு கிடுகிடுவென விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனை  ஆனது. தற்போது விலை குறைந்து கிலோ 120 ரூபாய்க்கு  விற்பனையாகி வரும் நிலையில் சந்தோஷ் என்ற மொத்த தக்காளி வியாபாரி மொத்த வியாபாரிகளுக்கு தக்காளியை ஏலம் விடாமல்  தனக்கு கிடைத்த 5 டன் தக்காளியையும் வெள்ளியன்று ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அதிரடி சலுகை யாக கிலோ ரூ.60 என்று அறிவித்தார். இதனால் மகிழ்ச்சிய டைந்த பொதுமக்கள் மற்றும் சிறு மளிகைக்கடை வைத்திருக்கும் வியாபாரிகள் அந்த கடையில் குவிந்து தக்காளி வாங்கிச்சென்றனர். தனி நபர் ஒருவருக்கு 2 கிலோ வீதம் விற்றார். பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர்.  ஆனால் இதே மார்க்கெட்டில் கிலோ ரூ.120க்கு தக்காளி விற்றது என்பது குறிப்பி டத்தக்கது.