திண்டுக்கல், மே 20- திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி முன்பாக வெள்ளி யன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மாவட்டச்செயலாளர் பகத்சிங் உரையாற்றி னார். நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் மாநகராட்சி அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைக்க வேண்டும். வெஸ்டர் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை நிறை வேற்றித்தருவதாக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து போராட் டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.