districts

மதுரை முக்கிய செய்திகள்

ராசிங்காபுரத்தில் நாளை மின் தடை

தேனி, ஜூன் 13- ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் ஜூன் 15-ஆம் தேதி(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி  நடைபெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது என  தேனி மின் வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் ஜூன் 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை  ராசிங்காபுரம், சிலமலை, டி.ரெங்கநாதபுரம், சங்கராபுரம்,  நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப் பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

உழவன் செயலி மூலம் திட்டங்களை அறிந்து கொள்க! விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

விருதுநகர், ஜூன் 13- உழவன் செயலி மூலம் விவசாயிகள் உரிய பதிவு கள் மேற்கொண்டு துறையின் திட்டப்பலன்களை அறிந்து  பயன்பெறவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்  வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் மேலும் கூறியதாவது: 2023-24 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,504 கிராம பஞ்சாயத்துகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  வேளாண்மை - உழவர் நலத்துறையில் பயன்பெறு வதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களின் தேவையை முன்கூட்டியே வேளாண்மைத் துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப்  பலன்களை பெற்றிட உழவன் செயலி ஏற்படுத்தப் பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் உழவன் செயலி யினை பதிவிறக்கம் செய்து திட்டப்பலன்களை பெற்றிட  உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். இதனால், வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும்  திட்டப்பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடைய லாம். எனவே, உழவன் செயலியினை விவசாயிகள் அவசி யம் பதிவிறக்கம் செய்து திட்ட பலன்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பழங்குடியினர் சாதிச்சான்று பெற  பாளையத்தில் நாளை சிறப்பு முகாம் 

தேனி, ஜூன் 13- நரிக்குறவர், குருவிக்காரர் சமூக மக்களுக்கு பழங்குடி யினர் சாதிச்சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம்  ஜூன் 15 ஆம் தேதி நடைபெற உள்ளதாக உத்தமபாளை யம் வருவாய் கோட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்கும் பொருட்டு ஏற்க னவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் மின்  வடிவிலான (Digital) முறையில் பெற்றுள்ள நரிக்குற வர், குருவிக்காரர் சமுதாய மக்கள் புதிய மின் வடிவிலான  (Digital) சான்றிதழ் பெறுவதற்கும் புதிதாக பழங்குடி யினர் என சாதிச் சான்றிதழ் பெற விரும்பும் நரிக்குறவர், குரு விக்காரர் சமூக மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று  வழங்குவதற்கான சிறப்பு முகாம் 15.06.2023 அன்று உத்தம பாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற உள்ளது. எனவே, அனைத்து நரிக்குறவர், குருவிக்காரர் சமு தாய மக்கள் மேற்படி சிறப்பு முகாமில் கலந்து கொண்டு  பயன்பெறலாம்.

ஜூன் 16 சின்னமனூரில்  விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

தேனி, ஜூன் 13- தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடை பெறும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற  16.06.2023 அன்று காலை 11 மணியளவில் சின்னமனூர்  கவிப்பிரியா திருமண மண்டபத்தில் (சின்னமனூரிலி ருந்து ஓடைப்பட்டி செல்லும் வழியில் வேளாண்மை விரி வாக்க மையத்திற்கு அருகாமையில்) நடைபெறவுள்ளது.  எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் சின்னமனூர் சுற்று வட்டார விவசாயிகள், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்  கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

தேனியில் கஞ்சாவுடன்  வாலிபர் கைது

தேனி, ஜூன் 13- தேனியில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த நபரை  கைது செய்த போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு  காவல்துறையினர் அவரிடமிருந்து 3.600 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்தனர். தேனி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல்  ஆய்வாளர் சத்யா ,சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜா மற்றும் காவல்துறையினர் ரோந்து சென்றனர்.அப்போது,  கருவேல் நாயக்கன்பட்டி ரயில்வே கேட்மேன் அறை  அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டி ருந்தார். அவரை பிடித்து போது அவரிடம் கஞ்சா இருப்பது  தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அதே  பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் மகேந்திர பிரபு என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 2.600 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

அவுட்சோர்சிங் முறை துப்புரவுப்பணியால் திருவில்லிபுத்தூர் நகராட்சி தவிப்பு

திருவில்லிபுத்தூர், ஜூன் 13- திருவில்லிபுத்தூரில் தற்போது துப்பு ரவுப் பணி நகராட்சியில் பணியாற்றும் நிரந்  தர துப்புரவுப் பணியாளர்களும் தனியார் நிறுவனமான எக்ஸ்னோரா அமைப்பும் சேர்ந்து பணிகளைச் செய்து வருகின்றன. அவுட்சோர்சிங் முறையில் பணியை எடுத்துள்ள நிறுவனம் திருவில்லிபுத்தூர் நகராட்சியை தவிக்கவிட்டு வருகிறது. அவுட்சோர்சிங் முறையில் துப்புரவு பணி களை மேற்கொள்ள வேண்டிய சென்னை யைச் சேர்ந்த ராமன் அண்ட் கோ நிறுவனம்  தேவையான பணியாளர்களை நியமிக்க வில்லை. இந் நிறுவனம் ஜூன் 1-ஆம் தேதி  பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், ஜூன் 2-ஆம் தேதி நகராட்சி ஆணை யாளர் மூலமாக வேலைக்கான உத்தரவு வழங்கப்பட்டது.  ஆனால், ஞாயிற்றுக்கிழமை வரை (ஜூன் 11-ஆம் தேதி) தனியார் நிறுவனம் பணிகளைத் தொடங்கவில்லை. தனியார் நிறுவனம் தரப்பில் இருவர் மட்டும் தலை வர் மற்றும் சுகாதார அலுவலரைச் சந்தித்து விட்டுச் செல்கின்றனர். நகர்மன்றத் தலை வர், “ராமன் அண்ட் கோ நிறுவன அலு வலர்களிடம் இருவர் மட்டும் வந்துள்ளீர்கள்  எப்படி பணியை தொடங்கப் போகிறீர்கள் என்று கேட்டதோடு மொத்தம் 165 பேர்  பணியில் இருக்க வேண்டும் குறைந்தபட்சம்  125 பேரை அழைத்து வந்து காட்டுங்கள் அப்போதுதான் பணியை தொடங்க முடி யும் இல்லையெனில் பணிகளை தொடங்க  முடியாது” எனக் கூறியுள்ளார். நகர்மன்றதலைவர் கேட்டுக் கொண்ட தன் அடிப்படையில் நிரந்தரப் பணியாளர் களும் எக்ஸ்னோரா ஊழியர்களும் ஞாயிற்  றுக்கிழமை வரை துப்புரவுப் பணிகளை செய்துள்ளனர். அவுட்சோர்சிங் என்றால் பணிகள் எப் படி நடைபெறும்? அவர்களை கேள்வி கேட்பது யார்? என்ற கேள்விகளுக்கு திரு வில்லிபுத்தூர் நகராட்சியே சான்றாக உள்  ளது.

ஜூன் 25 வரை இராமநாதபுரத்தில் வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம், ஜூன் 13- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு  சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்த தாவது: குழந்தைகளுக்கு  ஏற்படும் வயிற்றுப்போக்கு, 5 வய திற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கான முக்கிய கார ணங்களில் ஒன்றாக விளங்குகிறது.  5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பினைத் தடுக்கும் விதமாக நமது இராமநாதபுரம் மாவட்டத்தில்; 25.06.2023 வரை இரு வார காலத்திற்கு தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்  நடத்தப்பட உள்ளது. பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நீர கற்று வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல்  வாழ்வு, கிராம பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், பள்ளிக்கல்வி ஆகிய துறைகள் இணைந்து இத்திட்டத்தினை சிறப்புற நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.  ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஓ.ஆர்.எஸ் பொட்டலம் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் கிராம  சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியா ளர்கள் மூலம் இத்திட்டம் நடைபெறும் இருவார காலங்  களில் வழங்கப்படவுள்ளது. அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கைகழுவுதல் மூலம் கை சுத்தம்  பேணுவது பற்றிய செயல்முறை விளக்கம் வழங்கப்பட  உள்ளது. ஓ.ஆர்.எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வயிற்றுப்போக்கிற்கு மிகவும் சரியான சிகிச்சை முறை யாகும். ஆகவே பொதுமக்கள், இத்திட்டதில் பயணியாற் றும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பினை வழங்கி, 5 வய திற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

லாட்டரி விற்றவர் கைது

நத்தம், ஜூன் 13- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில்  அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை  செய்யப்படுவதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து சென்ற காவல்  சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் சோதனை செய்தனர். அப்போது செந்துறை பேருந்து நிலையம் முன்பு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி- செட்டி யபட்டியை சேர்ந்த கருமலையான் (68) என்பவரை  போலீ சார் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களையும், ரூ.5500 ரொக்கம், ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.