சுடுகாடு ஆக்கிரமிப்பு
திண்டுக்கல், மார்ச் 6- திண்டுக்கல் அருகேயுள்ள வடமதுரை பேரூ ராட்சிக்குட்பட்ட சித்தூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எட்டு தலைமுறைகளாக வசித்து வரு கிறார்கள். இந்த ஊரில் உள்ள பொது மயானத்தை மூன்று பேர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு களை அகற்றி சுடுகாட்டை மீட்டுத்தர வேண்டும் என கிராம மக்கள் திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
தாழ்வாகச் செல்லும் மின்வயரை மாற்றக் கோரிக்கை
சின்னாளப்பட்டி, மார்ச் 6- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் சக்கையாநாயக்கனூர் ஊராட்சிமன்ற அலுவலக பின்பகு தியில் உள்ள தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இந்தத் தெருவில் உள்ள மிக்கம்பம் போக்கு வரத்திற்கு இடையூறாக தெருவின் மையத்தில் அமைந்துள்ளது. இக் குடியிருப்பு வழியாகச் செல்லும் மின் வயர்கள் சிறுவர்கள் எட்டிப் பிடிக்கும் அளவிற்கு தாழ்வாக உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து இடை யூறாக உள்ள மின்கம்பத்தையும் மின்வயரையும் உடனடி யாக மாற்ற வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.டி.ஐ சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் பத்து ரூபாய் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தேனி, மார்ச் 6- ஆர்.டி.ஐ சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்து ரூபாய் இயக்கத்தி னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “கோட்டூர் ஊராட்சி யில் முறையற்ற செயல்பாடுகளை ஆர்டிஐ மூலமாக தக வல் கேட்ட பேராசிரியர் ராஜாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும் வீரபாண்டி பேரூராட்சி, ஓடைப்பட்டி மற்றும் ஆண்டிபட்டி பேரூராட்சிகளில் முறையற்ற செயல் பாடுகளை கண்டித்தும் வீரபாண்டி காவல்துறை பேராசிரி யர் ராஜா மீது பொய் வழக்குப் பதிவுசெய்து ஒரு தலை பட்சமாக செயல்படும் உதவி ஆய்வாளர் செல்வராஜ் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
தேனி, மார்ச் 6- தேனி பொம்மையகவுண்டன்பட்டி ஒண்டிவீரன் நகரைச் சேர்ந்தவர் குருசாமி மகன் பாபு (22). இவர் அதே பகுதியில் ஓடைத்தெருவில் உள்ள கருப்பையா என்பவ ருக்குச் சொந்தமான வீட்டில் கட்டுமானப் பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தார். கட்டடத்தில் சிலாப் போடுவதற்கு கம்பியைத் தூக்கும் போது மின்சாரக் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியது. பாபு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் உடலை சோதித்து பார்த்து இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இது குறித்து பாபுவின் தயார் சுப்புலட்சமி கொடுத்த புகாரின் பேரில் அல்லிநக ரம் காவல் ஆய்வாளர் கண்ணன் வழக்குப் பதவு செய்து விசாரித்தார்.
விபத்திற்கு இழப்பீடு வழங்காத அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஜப்தி
தேனி, மார்ச் 6- விபத்தில் செயலிழந்தவருக்கு இழப்பீடு வழங்காத அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தை நீதிமன்ற உத்த ரவுப்படி ஊழியர்கள் ஜப்தி செய்தனர். கூடலூர் அருகே லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மேக மலையில் பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி மேகமலையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் தனது மனைவி ஜெயந்தி மகன் ஜான் ஆகியோருடன் தேனிக்கு வந்து கொண்டிருந்தார். பழனிசெட்டிபட்டி அருகே வரும் போது இரு சக்கர வாகனம் மீது பின்னால் வந்த அரசுப் போக்கு வரத்து கழகப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணவர் மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் ஆறுமுகம் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். தனக்கு போதிய இழப்பீடு கேட்டு ஆறுமுகம் தேனி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆறு முகத்திற்கு இழப்பீடாக ரூ.35 லட்சம், அவரது மனைவி ஜெயந்திக்கு ரூ.4.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதி சுந்தரம் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டுத் தொகை வழங்காததால், அரசுப் பேருந்து களை ஜப்தி செய்ய குற்றவியல் நீதித்துறை தலைமை நீதி பதி கோபிநாத் உத்தரவிட்டார். அதன்படி, வழக்கறிஞர் சரவணன், பாண்டி செல்வி அமீனா ஹரிஹரபாண்டி ஆகி யோர் தேனி புதியப் பேருந்து நிலையத்திற்கு வந்த திண் டுக்கல் மண்டலத்தை சேர்ந்த ஒரு அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைந்தனர்.
தில்லி பேரணியை விளக்கி பழனியில் பிரச்சாரம்
பழனி, மார்ச் 6- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், ஏப்ரல் 5-ஆம் தேதி தில்லியில் சிஐடியு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள பேரணியை விளக்கி பழனி ஒன்றியத்தில் 17 இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. அகில இந்தியத் துணை தலைவர் ஏ.லாசர், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே.அருள் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கமலக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் பி.செல்வ ராஜ், என்.ஆறுமுகம், டி.துரைசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வா கிகள் எஸ்.கிருஷ்ணன், பி.சின்னச்சாமி, சிஐடியு நிர்வாகிகள் ஆர். ஈஸ்வரன், சி.பெரியசாமி, மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
போதிய விலை இல்லாததால் பறிக்கப்படாத இலவம் பஞ்சு காய்கள்
கடமலைக்குண்டு, மார்ச் 6- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு, காமராஜபுரம், முருக்கோடை, தங்கம்மாள்புரம், கோரை யூத்து, அரசரடி, வாலிப்பாறை, காந்திபுரம் உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆயிரக்க ணக்கான ஏக்கர் பரப்பளவில் இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்கும் நேரத்தில் இலவம் பஞ்சு சாகுபடியும் தொடங்கும். சுமார் மூன்று மாதங்கள் இலவம் பஞ்சு சாகு படி இருக்கும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் இலவம் பஞ்சு விளைச்சல் அதிகரித்துள்ளது. காய்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. அதே நேரத்தில் இலவம் பஞ்சுக்கு சந்தையில் போதுமான விலையில்லாத தால், இலவம் பஞ்சு விவசாயிகள் கவலைய டைந்துள்ளனர். கடந்தாண்டு ஒருகிலோ இலவம் பஞ்சு ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.50- க்கு வாங்க யாரும் முன்வரவில்லை. காய்களை மரத் தில் இருந்து பறிப்பதற்கு ஆகும் செலவுக்கு கூட போதுமானதாக இல்லை. இதனால் வருஷநாடு பகுதிகளில் இலவம் மரங்களில் விளைந்த இலவம் காய்களை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இலவம் பஞ்சுக்கு நிலையான விலை யை அரசு நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராஜபாளையம் அருகே வராண்டாவில் அமர்ந்து படிக்கும் பள்ளி மாணவர்கள்
இராஜபாளையம், மார்ச் 6- இராஜபாளையம், தளவாய்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறையை சீரமைக்க 15-ஆவது மத் திய நிதிக்குழு மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் தொடங்காததால் மாண வர்கள் வராண்டாவில் அமர்ந்து படிக் கின்றனர். ஓடு வேயப்பட்ட இப்பள்ளியில் 50 மாண வர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத தால் ஓடுகள் சேதமடைந்து மழை காலத் தில் மாணவர்கள் சிரமப்பட்டனர். இது குறித்து மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகாரளித்த னர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தொடக்கப்பள்ளி வகுப்பறையை சீரமைப்ப தற்காக ரூ.6.78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, இராஜபாளையம் யூனியன் கூட்டத்தில் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய மேற்கூரை அமைப்பதற்காக வகுப்பறையின் ஓடுகள் அகற்றப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னமும் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அங்கன் வாடி மைய கட்டடத்தின் வராண்டாவில் வைத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். பணி களை விரைவாக தொடங்வேண்டுமென ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மதுக்கடை மீது குண்டு வீசிய கள்ளச்சாராய வியாபாரிகள்
தொழிலாளர்கள் போராட்டம்
சிவகங்கை, மார்ச் 6- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிசப்பட்டதில பணம், மதுபாட்டில்கள் தீயில் எரிந்து நாச மானது. ஊழியர் தீக்காயம் அடைந்தார். சம்பத்தன்று பணியில் காரைக்குடியை சேர்ந்த பூமிநாதன் (53), விற்பனையா ளர்களான இளையான்குடி அருகே உள்ள கீழாயூரைச் சேர்ந்த பாஸ்கரன்(42), கண் மாய்குளத்தை சேர்ந்த அர்ஜூனன்(46) ஆகி யோர் இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் பெட் ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து அதனை டாஸ்மாக் கடையில் வீசி எறிந்தார். அந்த பாட்டில் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. கண் இமைக்கும் நேரத்தில் கடையில் மளமளவென தீப் பிடித்தது. மேலும் விற்பனையாளர் அர்ஜூ னன் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்திற்குக் காரணம் கள்ளச்சாராய கும்பல்தான் என டாஸ் மாக் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ள னர். கள்ளச் சாராயக் கும்பலைக் கண் டித்து சிவகங்கையில் டாஸ்மாக் தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறு கையில், “பள்ளத்தூர் டாஸ்மாக் கடை நான்கு ஆண்டுகளாக செயல்படவில்ஸை. டாஸ்மாக் கடை இல்லாத காலத்தில் (கடந்த நான்கு வருடமாக) பள்ளத்தூரில் கள்ளச்சாராயம் விறுவிறுப்பாக நடந்தது. மாதம் ரூ.30 லட்சம் வருவாய் ஈட்டியுள்ள னர். தற்போது மீண்டும் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் கள்ளச்சாராயம் விற்கும் கும்பலுக்கு பாதிப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் தொழிலாளர்களை மிரட்டி கடையை பூட்டச்செய்து விடலாம் என்ற நோக்கத்தோடு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மார்ச் 2-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசியதில் டாஸ்மாக் தொழிலாளர் அர்ஜூனன் பலத்த காயமடைந்தார் என்றார்.
பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி சட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி, மார்ச் 6- பொய் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக் கல்லூரி மாண வர்கள் மீது தரப்படும் பொய்ப் புகார்கள் மீது முறையான விசாரணை நடத்தாமல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வதைக் கண்டித்தும், திருவாரூர் மாவட்டம் குட வாசல் காவல்துறையினர் தேனி சட்டக் கல்லூரி மாணவர் சரத்பாபு என்பவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்குவதற்காக, போராட்டத்திற்கு வந்த மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அப் போது காவல்துறைக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களுக் கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, காவல்துறையினர் ஐந்து மாணவர்களை மட்டும் ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுமதித்தனர்.
சிபிஎம் கிளை அமைப்பு
திருச்சுழி, மார்ச் 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றுத் திறனாளி கள் அரங்க புதிய கிளை திருச்சுழியில் அமைக்கப்பட்டது. அமைப்புக் கூட்டத்தில் ஜெயராணி, மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கே.நாகராஜ் , மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எம். சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலாளர் மார்க் கண்டேயன், ஏ.குமரேசன், வி.பூமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஹேண்ட்பால் தேசியப் போட்டி தமிழக அணி தேர்வு
சின்னாளபட்டி, மார்ச் 5- உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான அகில இந்திய ஹேண்ட்பால் போட்டி மார்ச் 22- ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான தேர்வு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி யில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்றது. சங்கத் தலைவரும் காவல் துறை அதி காரியுமான ராமசுப்பிரமணியன் வழிகாட்டுதல்படி நடை பெற்ற தேர்வில் சேரன் பள்ளியின் தாளாளரும் ஹேண்ட் பால் சங்க மாநிலச் செயலாளருமான சிவக்குமார், சங்கத் தின் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதி ராஜா, பயிற்சியாளர்கள் அசோக், செந்தில் மற்றும் 34 மாவட்ட விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 100 மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 16 பேர் தமிழக அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அறிவொளி மலர் வெளியீட்டு விழா
சிவகங்கை, மார்ச் 6- சிவகங்கை மாவட்ட அறிவொளி இயக்கத்தின் 30- ஆம் ஆண்டு விழா, அறிவொளி மலர் வெளியீட்டு விழா அரசு ஊழியர் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. அறிவொளி இயக்க ஒருங்கிணைப்பாளர் கே.பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். மலர்க்குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் வரவேற்றார். அழ கப்பா பல்கலைக்கழ முன்னாள் துணைவேந்தர் சுப்பையா மலரை வெளியிட பேரா.ராஜமாணிக்கம் பெற்றுக் கொண் டார். நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ரவிசங்கர், மாவட்டத் தலைவர் கோபிநாத், சாஸ்தா சுந்தரம், எய்டுஇந்தியா ஒருங்கிணைப்பாளர் மாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சிவகாசி அருகே கொலை
சிவகாசி, மார்ச் 6- சிவகாசி அருகே சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). கூலித் தொழிலாளியான இவரது நண்பர் முத்துராஜ் (38). இருவரும் சேர்ந்து மது அருந்தி யுள்ளனர். அப்போது, மாற்றுத்திறன் கொண்ட முத்துராஜின் உடல் குறைபாட்டை மணிகண்டன் கிண்டல் செய்ததா கக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் கழுத் தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் மணிகண்டன் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாரனோரி காவல்துறையினர் முத்துராஜை கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் சங்க கிளை அமைப்பு
திருவில்லிபுத்தூர், மார்ச் 6- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருவில்லிபுத்தூர் ஒன்றியம் மானகசேரி கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ராஜேஸ்வரி தலைமை வகித்தார். சிவகாசி வீரமுத்து துவக்கி வைத்தார். நாகராஜ் மாவட்டச் செயலாளர் நாகராஜ் சிறப்பு ரையாற்றினார். தலைவராக குருசாமி செயலாளராக ராஜேஸ்வரி பொருளாளராக மாரிமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : இருவர் தீக்காயம்
விருதுநகர், மார்ச் 6- விருதுநகர் அருகே உள்ளது கோட்ட நத்தம் கிராமம். இங்கு, ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 100 தொழிலாளர்கள் வரை பணிபுரிந்து வரு கின்றனர். இந்நிலையில், வழக்கம் போல திங்க ளன்று காலை, தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது பட்டா சுக்கு தேவையான கருந்திரி தயாரிக்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. கருந்திரி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டி ருந்த சேடப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (42), கருப்பையா (60) ஆகிய இரு தொழிலா ளர்களுக்கு பெரும் தீக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை பிற இடங்களுக்குப் பரவ விடாமல் தடுத்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் விருது நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்கள், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 23 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல், மார்ச் 6- திண்டுக்கல் அருகே உள்ளது சமத்துவ புரம். இங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை பாரதிபுரத்தைச் சேர்ந்த பவுன்பாண்டி (31) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள் ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து திண்டுக் கல் தாலுகா காவல்நிலைய அதிகாரிகள் வழக்குப் பதியவில்லை. புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாமல் குற்றவாளிக்கு சாதக மாக நடந்து கொண்டனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யக்குழு சார்பாகவும், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பாகவும் குள்ள னம்பட்டியில் நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில பவுன்பாண்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கத் தலை வர்களுக்கு மிரட்டல் விடுத்தார். இந்தப் பின்னணியில் எதையும் பொருட்படுத்தா மல் நீதிமன்றத்தில் போக்சோ குற்ற வாளிக்கு எதிராக தைரியமாக சாட்சிகள் சாட்சியமளித்தனர். கடந்த மூன்றாண்டு களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு மார்ச் 4-ஆம் தேதி அளிக்கப்பட்டது. “பவுன்பாண்டி மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தியத் தண்டனைச்சட்டம் 354-பிரிவின் கீழ் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும், ரு.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.