மதுரை சரக காவல்துறை துணைத்தலைவருக்கு சிபிஎம் கோரிக்கை
மதுரை, ஜூன் 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தே.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.சமையன் மற்றும் கட்சியினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண் டும் என்று வலியுறுத்தி மதுரை சரக காவல்துறை துணை தலை வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் அனுப்பியுள்ள மனு வில் கூறியிருப்பதாவது: கடந்த 2.4.2023 அன்று மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே. கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வன்னிவேலம்பட்டி கிராமத்தில் போதைப் பொருள் விற்பனை செய் யும் வியாபாரி மலிங்கா (எ) சண்முக பாண்டியன் மற்றும் பலர், குச்சம் பட்டியைச் சேர்ந்த செல்வபாண்டி என்ற வாலிபரை பிடித்து வைத்துள் ளனர். இந்த தகவல் அறிந்த செல்வ பாண்டி நண்பர்கள் அவரை மீட்கச் சென்றுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள் ளது. அப்போது போதைப் பொருள் வியாபாரி சண்முகபாண்டியன் மற் றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து பட்டாகத்தி போன்ற ஆயுதங்க ளால் செல்வபாண்டி நண்பர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் வன்னிவேலம் பட்டியைச் சேர்ந்த ச.சமையன் மகன் வீரக்குமாருக்கு வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்ப வம் அறிந்து அங்கு சென்ற வீரக் குமாரின் தகப்பானார் ச.சமையன் அவர்களிடம், போதைப் பொருள் வியாபாரி சண்முகபாண்டியன், முருகேசன், சரவணன் ஆகியோர், நாங்கள் கூலிப்படையாக வளர்ந்து வருகிறோம். ஏற்கனவே 7 வழக்கு களிலிருந்து 5 வழக்கை உடைத் துள்ளோம். எங்களுக்கு பெரிய ஆட்களுடன் தொடர்பு உள்ளது என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக 2.4.2023 அன்று தே.கல்லுப்பட்டி காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டுள் ளது. மேற்படி, தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் இந்த சம்பவத்திற்கு தொடர்பு இல்லாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தே.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.சமையன் தூண்டுதலின் பேரில் தான் இந்த தாக்குதல் நடந்ததாக உண்மைக்கு புறம்பான புகாரை அளித்துள்ள னர். அன்றைய தினம் (2.4.2023) வி. சமையன் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்ட சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பத்மநாபன், மார்க் சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் வி.சமையனையும் இணைத்து 294(பி), 147, 427, 109, 379 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய் துள்ளனர்.
வன்னிவேலம்பட்டியில் ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் காளி யம்மன் கோவில் திருவிழா நடை பெற்றுள்ளது. ஜூன் 3 அன்று ஒரு சில வாலிபர்கள் சாதி அமைப்பின் கொடியைப் பிடித்துக் கொண்டு தெருக்களில் ஆடி வந்துள்ளனர். ஏற்கனவே, வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவில் உள்ளவர்கள் அவர்களது பகுதிகளிலேயே கேளிக்கைகளை நடத்தி வந்துள்ள னர். ஆனால் வடக்குதெரு வாலி பர்களில் சிலபேர் தெற்குதெரு வுக்கு சென்று ஆடியதால் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சில வாலி பர்கள் ஆயுதங்களுடன் அத்துமீறி தெற்குதெருவில் நுழைந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது. மேற்படி சம்பவத்திற்கு தொடர்பில்லாத மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி.சமையன் அப்பொ ழுது அவரது தோட்டத்தில் பணி செய்துகொண்டிருந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடு பட்ட அழகுமலை கண்ணன், அருண்குமார், பழனியம்மாள் உள்ளிட்ட நபர்கள் வி.சமையன் தூண்டுதலில் தான் இந்த சம்பவம் நடந்ததாக உண்மைக்கு புறம்பான புகாரை கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தொடர்பில்லாத வி.சமையன் மற்றும் மகன்கள் சந்துரு, சேகுவேரா, தங்கை மகன் கள் அஜய்குமார், ஆகாஷ்குமார் ஆகியோர் மீது உண்மைக்கு புறம்பான புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பத்மநாபன் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் மேற்படி சம்பவங்களை விசாரித்து, இதில் ஈடுடாத மார்க்சிஸ்ட் கட்சியின் தே.கல்லுப் பட்டி ஒன்றியச் செயலாளர் வி. சமையன், அவரது மகன்கள் சந் துரு, சேகுவேரா மற்றும் வி.சமை யனின் தங்கை மகன்கள் அஜய்குமார், ஆகாஷ்குமார் ஆகி யோர் மீது போடப்பட்ட உண் மைக்கு மாறான வழக்குகளை ரத்து செய்யவும், வன்னிவேலம் பட்டி கிராமத்தில் காவல்துறையின ரின் தொடர் அச்சுறுத்தலை தவிர்க்க வும் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இன்று ஆர்ப்பாட்டம்
ஒன்றியச் செயலாளர் சமை யன் மற்றும் கட்சியினர் மீது போடப் பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி தே.கல்லுப்பட்டி யில் திங்களன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.