மதுரை, பிப்.4- கஞ்சா வியாபாரிகள் குறித்த சரித்திரப் பதிவேடு களை காவல்துறையினர் திரட்டியுள்ளனர்.அவர்க ளின் தொடர் நடவடிக்கை களை கண்காணித்து வரு கின்றனர் என தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் தெரிவித்துள் ளார். சனிக்கிழமை அவர் கூறியதாவது: கஞ்சா கடத்தலில் ஈடு பட்டதாக குற்றம்சாட்டப் பட்டுள்ள 624 பேர் குறித்த சரித்திரப் பதிவுகள் இது வரை திரட்டப்பட்டுள்ளது. இதுவரை, ரவுடிகள் மற்றும் கொலை அல்லது திருட்டு மற்றும் கொள்ளை சம்பந்தப்பட்ட குற்ற வழக்கு களில் தொடர்புடைய வழக்கமான குற்றவாளிக ளுக்கு எதிராக மட்டுமே அவர்களின் சரித்திரப் பதி வுகளை காவல்துறையினர் திரட்டி வந்தனர். இப்போது, “போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சமூகத்திற்கு பெரும் ஆபத்தை விளைவித்து வரு கின்றனர். எனவே அவர்க ளுக்கு எதிராக சரித்திரப் பதிவேடுகளை திறக்க காவல்துறை தயாரிக் கும் பணியை மேற்கொண் டுள்ளது. போதைப் பொருள் வியாபாரிகள் போதைப் பொருட்களை விற்பதன் மூலம் நூற்றுக்கணக்கா னவர்களின் வாழ்க்கையை அழிக்கின்றனர். கடந்த சில நாட்களாக, தென் மாவட்டங்களில், கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் விற்பனையாளர்க ளுக்கு எதிராக, சரித்திரப் பதிவேடுகளை காவல்துறை யினர் தயாரித்து வரு கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக திறக் கப்பட்டுள்ள சரித்திரப் பதி வேடுகள் மூலம் காவல்துறை யினர் அவர்களது நடவ டிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பர். சம்மந்தப் பட்டவர்களைச் சந்தித்து போதைப் பொருள் விற்பது சட்டவிரோதம் என்பதை எடுத்துக்கூறி அவர்களது நடவடிக்கைகளை காவல் துறையினர் கைவிடச் செய்வர். “என்டிபிஎஸ் சட்டத்தின் 34-ஆவது பிரிவின்படி, நீதிமன்றங்கள் குற்றவாளி களுக்கு மூன்று ஆண்டுகள் வரை நன்னடத்தை உறுதி மொழிப் பத்திரங்களை வழங்கலாம். இது குற்ற வாளிகள் திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும். போதைப் பொருள் விற்க மாட்டோம் என உறுதி மொ ழிப் பத்திரங்கள் அளித்துள் ளவர்கள் அதை மீறினால் உறுதி மொழி கொடுத்துள்ள ஆண்டிற்கும் சேர்த்து தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். கடந்த சில நாட்களாக, தென் மண்டல காவல்துறை யினர், 54 குற்றவாளிகளை, நீதிமன்றங்கள் மூலம் சிறையிலடைத்துள்ளனர். 13 கஞ்சா கடத்தல் வழக்குகளில் காவல்துறை நீதி விசாரணையைத் தொ டங்கியுள்ளது, குற்றம் சாட் டப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உற வினர்களின் 1,956 வங்கிக் கணக்குகள் 2022- ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. மேலும், அவர்களின் ரூ.12.5 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.