districts

img

சிஐடியு நடைபயணத்திற்கு மதுரை மாநகரில் சிறப்பான வரவேற்பு

மதுரை, மே 24- தொழிலாளர் நலக் கோரிக்கை களை முன்வைத்து நடத்தப்பட்டு வரும் சிஐடியு நடைபயணத்திற்கு மதுரை மாநகரில் சிறப்பான வர வேற்பு கொடுக்கப்பட்டது. குறைந்த பட்ச ஊதியம் மாதம்  ரூ.26 ஆயிரம் வழங்கிட சட்டம்  இயற்ற வேண்டும். பொதுத்துறை  நிறுவனங்களை தனியார்மய மாக்கும் போக்கை கைவிட வேண்  டும். முறைசாரா தொழிலாளர் களுக்கு தேசிய நிதி ஆணையம் ஏற்படுத்தி  நலவாரிய குறைபாடு களை களைந்திட வேண்டும் என்று  வலியுறுத்தி தமிழகத்தின் 7 முனை களிலிருந்து இந்திய தொழிற்சங்க  மையம் (சிஐடியு) சார்பில் நடை பயண பிரச்சாரம் நடைபெற்று வரு கிறது. இந்த நடைபயணத்திற்கு மதுரை மாநகர் பகுதியில் புதனன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. நரி மேடு மருதுபாண்டியர் தெரு பட்டுக்கோட்டை வீதியில் மாநக ராட்சி துணை மேயர் டி. நாகராஜன் தலைமையில் சிஐடியு, கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வர வேற்பு அளிக்கப்பட்டது. பேரணி யில் சிஐடியு மாநிலச் செயலாளர் இரா.தெய்வராஜ்,  மாநகர் மாவட்  டச் செயலாளர் இரா. லெனின், கட்டு மான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி. சுப்பையா, தலை வர் ராஜேந்திரன், பகுதிக்குழு செய லாளர் ஜாகீர், தலைவர் சங்கர் ஆகி யோர் கலந்துகொண்டனர். வர வேற்பில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன்,  

மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.  ரமேஷ், பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு ஆகியோர் பங்கேற்றனர்.  நரிமேடு பகுதியில் தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன் தலைமையில் வர வேற்பு அளிக்கப்பட்டது, செல்லூர்  தாகூர் நகர் பகுதியில் அகில இந்திய  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்  பில் கோட்டத் தலைவர்  நா. சுரேஷ்  குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முனிச்சாலை பகுதியில் நடை பெற்ற பிரச்சாரத்தில் நெய்வேலி  பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஊழி யராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற விஜயராஜன் பயணக்குழுவிற்கு ரூ.2 ஆயிரம் நிதியளித்தார். மற்  றொரு தொழிலாளி ரூ.500 அளித்தார். சிம்மக்கல் ஆறுமுச்சந்தியில் மாவட்ட துணை செயலாளர் எம்.  பாலசுப்பிரமணியன் தலைமையி லும்,  மாவட்ட துணைத்தலைவர்  டி.  செல்வராஜ் தலைமையில் ஒபுளா படித்துறை, தெப்பக்குளம் பகுதி யில் சிஐடியு ஸ்தாபக தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி சிலை அரு கில் அரசு போக்குவரத்து தொழிலா ளர் சங்க  மாநில துணைத்தலைவர் வீ.பிச்சை தலைமையிலும் வர வேற்பு அளிக்கப்பட்டது.  மாலையில் பெத்தானியாபுரத் தில் துவங்கிய பேரணியை தமிழ்  நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.நீதிராஜா துவக்கி வைத்தார்.  அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் சார்பில் போக்குவரத்து தலைமையகம் அருகில் வரவேற்பு அளிக்கப் பட்டது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாநில தலைவர் மதுக்கூர் ராம லிங்கம் வாழ்த்திப் பேசினார்.