districts

img

விருதுநகரில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி

விருதுநகர், மார்ச் 12- விருதுநகர் வே.வ.வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரி யில் “மாபெரும் தமிழ்க் கனவு”  தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் தலைமையில்  நடை பெற்றது. விருதுநகரில் தமிழ் மரபின் வள மையையும், பண்பாட்டின் செழு மையையும் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும் வளரும் தலைமுறையினருக்கு முழுமையாகக் கடத்துவதற்கும், பண்பாட்டின் முக்கியக் கூறு களான கலை, இலக்கியம், கல்வி,  இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை  முறை ஆகியவற்றை அடுத்த தலை முறையினருக்கு உணர்த்திடும் நோக்கித்தில்  “மாபெரும் தமிழ் கனவு”  நிகழ்ச்சி நடைபெற்றது. . இதில், தமுஎகச மதிப்புறு தலை வரும் எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன்,  ‘பண்பாடு, தமிழ்  பண்பாடு, தமிழ் பண்பாட்டின் வேர்  கள் என மூன்றாக பிரித்து உரை யாற்றினார். மனித குல வாழ்க்கை அரசியல், பொருளாதாரம், பண்  பாடு இந்த மூன்றிலும் அடிப்படை யாக இருப்பது பொருளாதாரம். பொருளாதாரம் என்பது ஒரு சமூ கத்திற்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் என்ற அடிப் படை தேவைகளை உற்பத்தி செய்  யக்கூடியது.   நிலம் இவை அனைத்  தையும் பற்றி பேசுவது தான்   பொருளாதாரம். அந்த பொருளா தாரம் யார் கையில் இருக்க வேண்டி யது என்பது பற்றி பேசுவது தான் அரசியல். பண்பாடு என்பது யார்  கையில் இருக்க வேண்டும் என்பது  மக்கள் தாமாக ஒப்பு கொள்ள வைப்  பது ஆகும் என்றார்.   மாவட்ட ஆட்சியர் பேசுகை யில்,  தமிழர்களுக்கென்று வரலாறு  முழுமைக்கும் மிகப் பெரிய பெருமை இருந்து கொண்டே வந்தி ருக்கிறது. அந்த பெருமை பொரு ளாதார வலிமை கட்டமைப்பு களோடு மட்டுமல்லாமல் அறத்தின் வழியில் நின்று விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பதில்தான்  தமி ழர்களின் பெருமை இருந்திருக்கி றது.

 அது உலக அளவில் இருக்  கக்கூடிய வணிகமாக இருக்கட்டும் அல்லது உள்ளூரில் உள்ள சிறு தெய்வ வழிபாடாக  இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் தமிழர் களுக்கென்று மிகப்பெரிய அற மும், மரபு தொடர்ச்சியும் இருந்து  வருகிறது. அவற்றை ஒவ்வொரு துறைகளிலும்  உள்ள ஆளுமைகள் தங்களுடைய  அனுபவங்களை கடத்துவதற்காகத்தான் இந்த மாபெரும் தமிழ் கனவு என்ற நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரி வித்தார்.  ‘பெண்களும் வரலாறும்” என்ற  தலைப்பில்  ஓவியா பேசுகையில், பண்டைய வரலாறு, மன்னர் ஆட்சி  முதல் மக்களாட்சி வரை தற்போது உள்ள காலங்களில் பெண்களின் வரலாறுகள் குறித்தும், வரலாற்று களில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், பெண்களுக்கான முக்கி யத்துவம் குறித்தும், பெண்கள் பல வீனமானவர்கள் அல்ல எனவும்,  ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமம் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வரு வாய் அலுவலர் ரவிகுமார், கல்லூரி செயலாளர்  கோவிந்தராஜ பெரு மாள் மற்றும் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.