சிவகங்கை, ஏப்.11- சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி அரங்கில் ஏப்ரல் 11 அன்று தமிழ் இணை யக் கல்விக்கழகம் சார்பில், மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்.ப.மதுசூதன் ரெட்டி தலைமை யில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலை வர் பேசுகையில், தமிழ் மரபின் வளமை யையும் பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியினர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டும், சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி சிறப்பாக நடை பெறுகிறது. தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினராகிய கல்லூரி மாணாக்கர்களுக்கு உணர்த்துவது என்பது ஆரோக்கியமான எதிர்கால சமூக கட்ட மைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். கருத் துக்களை உள்வாங்கி, மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணாக்கர்கள் சிறப்பான நடவடிக்கை களை மேற்கொண்டு, தங்களை சார்ந்த வர்களும் எடுத்துரைத்து, பயன்பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வரு வாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனை வர் .ப.நாகராஜன், சொற்பொழிவாளர்கள் ராஜா, யாழினி (மருத்துவர்), சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் க.துரையரசன் மற்றும் ஆசி ரியர்கள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.