வெம்பக்கோட்டை, செப்.10- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே உள்ள விஜயகரி சல்குளத்தில் நடைபெற்று வரும் இரண் டாம் கட்ட அகழாய்வில் திரவம் வழிந்த நிலையில் சுடுமண் பானை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் நடை பெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வா ராய்ச்சியில் தங்க அணிகலன், தங்கத் தாலி, ஆண் உருவச் சுடுமண் பொம்மை, யானைத் தந்த பகடைக்காய், சுடுமண் அகல் விளக்கு, சுடுமண் வணிக முத்திரை சுடு மண்ணால் ஆன வட்ட வடிவ தட்டு, சுடு மண் அணிகலன், பச்சை மற்றும் வெள்ளை நிற பாசி மணிகள், சங்கு, துதியாளி பொறிக்கப்பட்ட வேணாட்டு சிற்றரசு கால செப்பு நாணயம், கருங்கல் சுவர் உள்ளிட்ட எண்ணற்ற வகையிலான தொன்மையான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள ளது. இந்நிலையில் திரவம் வடிந்த நிலை யில் கூம்பு வடிவ சுடுமண் பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இங்குச் சங்கு வளையல் தொழில் கூடம் இருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சங்கு வளையல் தொழில் கூடத் திற்குத் தேவையான திரவப் பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தொல்லி யல்துறையினர் தெரிவித்தனர்.