கும்பக்கரை அருவியில் ஞாயிறன்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் மறுகரையில் சுமார் 30பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் அனுமதிக்கப்படுவர் என்றனர்.