districts

மதுரை முக்கிய செய்திகள்

தனியார் நிறுவனத்திற்கு  ரூ.15 ஆயிரம் அபராதம்

நாகர்கோவில், பிப்.04 கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தோவாளை யில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து கடன் வாங்கி இருந்தார். இந்த நகையை பால முருகனுக்கு தெரியாமல் நிதி நிறுவனம் ஏலத்திற்கு விட முயன்றதாகக் கூறப்படுகிறது. இது பற்றி தெரிய வந்ததும் பாலமுருகன் நகையை திருப்ப சென்றுள்ளார். அப்போது அவரை அலைக்கழித்ததுடன், பணம் செலுத்திய நாளில் இருந்து 20 நாட்கள் கழித்து தான் நகையைத் திருப்பித் தரமுடியும் என நிதி நிறுவனம் கூறியதாக தெரிகிறது.  இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், நிதி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதன்பிறகும் உரிய பதில் கிடைக்காததால், கன்னியா குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பாலமுருகன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டைச் சுட்டிக் காட்டி பாலமுருகனுக்கு ரூ.15,000 நஷ்ட ஈடு- வழக்குச் செலவு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.

விஷம் கலந்த அரிசி  தின்ற ஆடுகள் பலி 

தூத்துக்குடி, பிப்.4- தூத்துக்குடி தாளமுத்து நகர் துப்பாஸ்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (56). விவசாயி. இவருக்கு சொந்தமான ஆடுகளை வெள்ளப்பட்டி மற்றும் தாள முத்து நகர், தருவை குளம் ரோடு மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் மேய்ச்சலுக்காக விடுவது  வழக்கம். வெள்ளிக்கிழமை மேச்சலுக்காக சென்ற  ஆடுகள் அப்பகுதியில் விஷம் கலந்து வைக்கப்பட்டி ருந்த அரிசியை தின்றுள்ளது. இதில் மூன்று ஆடுகள் பலியாயின. வெள்ளைச்சாமி அளித்த புகாரின் பேரில்   காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஓய்வூதியர் சங்க பேரவை

குழித்துறை, பிப்.4- கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில்  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 11- ஆவது அமைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. வட்டத்தலைவர்  நாராயணபிள்ளை சங்கக் கொடியை ஏற்றினார். வட்ட இணைச்செயலாளர் செல்வ மணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வட்டத் துணைத்தலைவர் சுலோச்சனா  வரவேற்றார்.  பேரவை யை மாவட்ட இணைச்செயலாளர் சசிதரன் துவக்கி வைத்தார். வட்டச் செயலாளர் ஜெயசிங் வேலை அறிக்கை யையும், பொருளாளர் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தீர்மானங்களை ஜெகதம்மா, சுலோச்சனாபாய்,  சசிகலா விஜயகுமாரி, மற்றும் ஜி‌.கெங்காதரன் நாயர் முன்மொழிந்னர். பேரவையில் ஐந்து வட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். 80 வயதை அடைந்த மூத்த உறுப்பினர்கள்  கௌர விக்கப்பட்டனர். மாவட்டத் துணைத் தலைவர் ஐசக் சாம்ராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத்தலைவர் சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சுகுமாரன் நிறைவுரை ஆற்றினார். ஜெலஸ்டின் நன்றி கூறினார். பேரவையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதர்களுக்கு பத்து சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும், அங்கன் வாடி ஊழியர்கள் சத்துணவு ஊழியர்கள், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தாளர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12 லட்சம் மோசடி 

தூத்துக்குடி, பிப்.4- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல் தோத்தி பகுதியைச் சேர்ந்தவர்  ராமர் (48). இவரது முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்த மாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப் பிட்டுள்ள வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு பின்னர் அவர்கள் கொடுத்த இணையத்தில் ரூபாய் 12,10,740/- முதலீடு செய்துள்ளார். பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதைய றிந்த ராமர் சைபர் கிரைம் காவல்துறையில்புகாரளித்தார்.  இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை யினர் கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன் கருணாகரனை  (32) கைது செய்தனர். அவரிமிருந்து ரூ.5 லட்சம் பணம், ஒரு ஸ்கோடா  கார், ஆப்பிள் லேப்டாப் மற்றும் செல்போன் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை காவல்துறையினர் சிறையிலடைத்தனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17லட்சம் மோசடி செய்தவர் கடத்தல்? 

கோவில்பட்டி, பிப்.4- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளஞ்சம்பூரைச் சேர்ந்த கோவிந்த ராஜ் மகன் உமையலிங்கம் (34). இவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில் ல்பட்டியில் பாண்டவர் மங்கலம் தென்றல் நகரில் ஒரு ஆலயத்தை நிர்வகித்து வருகிறார். தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறார். உமையலிங்கம் வியாழன் இரவு ஆலயத்திலிருந்து வீட்டிற்கு திரும்பும்போது  இரவு ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றுள்ளது. இதுகுறித்து உமையலிங்கத்தின் உறவினர் ராஜூ கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உமையலிங்கத்தை கடத்துவ தற்கு பயன்படுத்தப்பட்ட காரின் ஓட்டுநர் விருதுநகரைச் சேர்ந்த மனோ கர் (29) என்பவரைக் கைது செய்தனர்.  வேலை வாங்கித் தருவதாகக் கூறி உமையலிங்கம் பலரை ஏமாற்றியுள்ளார். இதனால் ஏமாற்றம டைந்தவர்கள் அவரைக் கடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கடத்தல் தொடர்பாக ரவிகுமார், மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ், வடிவேலு, செல்வம், கார்த்திக் ஆகி யோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தற்கொலை

தூத்துக்குடி, பிப்.4- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மறவர் காலனி,மேட்டுத் தெருவைச் சேர்ந்த வர் செல்வம் (51). இவர் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலை யில் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் விரக்தியில் இருந்த செல்வம்  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தரமற்ற முறையில் ரயில்வே பாலப் பணி  மக்கள் கொந்தளிப்பு

நாகர்கோவில், பிப்.04 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒற்றை வழித்தடமாக இருந்த கன்னியாகுமரி-திரு வனந்தபுரம் ரயில் வழிப் பாதை இரட்டை  வழிப் பாதையாக மாற்றும் பணி நடை பெற்று வருகிறது. இதற்காக ஒற்றை ரயில் வழிப்பாதை மேலாகச் செல்லும் பழைய மேம்பாலங்கள், ஆற்று மேம்பாலங்கள் இடித்து அகற்றப்பட்டு புதிய பாலங்கள் ரயில்வே சார்பில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பேச்சிப்பாறை அணையில்  இருந்து திருவிதாங்கோடு- மண்டைக்காடு கிளை கால்வாய்க்கு விவசாயத்திற்காக வும் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் இரணி யலில் புதிதாக கட்டப்பட்ட இரும்பு ரயில்வே ஆற்று மேம்பாலத்தில் வரும் போது இரும்பு மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிச லால் தண்ணீர் கசிந்து பீச்சியடித்தது. பாலம் தாழ்வாக அமைக்கப்பட்டதால் மறுபக்கம் தண்ணீர் செல்லாமல் பாலத்தில் தேங்குகிறது. இதனால் பாலம் உடைந்து சேதமடையும் சூழல் உருவாகிவருகிறது. ஆபத்தை கருத்தில் கொண்டு திறக்கப்பட்ட தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது.  இரும்புப் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் மற்றும் நீர் கசிந்த இடங்கள்  சிமெண்ட் கலவையால் செங்கற்களை கொண்டு அடைக்கப்பட்டது. இதையறிந்த மக்கள்  தரமற்ற பணிகள் குறித்து திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத் துணைப் பொறியாளர் பெமிலாவிடம் விளக்கம் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டார்.  புதிதாக கட்டப்பட்ட இரும்பு ரயில்வே ஆற்று மேம்பாலத்தை முழுமையாக மாற்றி கட்டமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலங்கார மீன்வளர்ப்பில்  மேலாண்மை முறைகள்  மீன்வளக் கல்லூரியில் பயிற்சி வகுப்புகள்!

தூத்துக்குடி, பிப்.4- தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி சார்பில் “அலங்கார மீன்வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறைகள்” குறித்து இரண்டு  நாள் பயிற்சி  நடைபெற உள்ளது. தூத்துக்குடி, மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மீன்வள விரி வாக்கம், பொருளியியல் மற்றும் புள்ளி யியல் துறையின் மூலம் “அலங்கார மீன் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை முறை கள்” என்ற இரண்டு நாள் பயிற்சி 16.02.2023 முதல் 17.02.2023 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் அலங்கார மீன்வளர்ப்பில் சிறந்த மேலாண்மை குறித்த பாடவகுப்புகளும், களப் பயிற்சிகளும் வழங்கப்படும்.  பயிற்சியில் கலந்து கொள்ள விருப்ப முள்ளவர்கள் பயிற்சி கட்டணமாக ரூ. 500- செலுத்தி பயிற்சி பெற்று பயனடை யலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட அலை பேசி மற்றும் தொலைப்பேசி மூலமாக 15.02.2023 பிற்பகல் 5  மணிக்குள் தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம். மீன்வளத்தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி தூத்துக்குடி, மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மீன்வள விரி வாக்கம், பொருளியியல் மற்றும் புள்ளியி யல் துறையின் மூலம் “மீன்வளத்தொழில் முனைவோர் மேம்பாடு”  இரண்டு நாள் பயிற்சி 22.02.2023 முதல் 23.02.2023 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மீன்வளத்தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பாட வகுப்புகளும், களப்பயிற்சி களும் வழங்கப்படும்.  பயிற்சியில் கலந்து கொள்ள விருப்ப முள்ளவர்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ.500- செலுத்தி பயிற்சி பெற்று பயன டையலாம்.  இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட அலைபேசி மற்றும் தொலைப்பேசி மூல மாக 21.02.2023 பிற்பகல் 5 மணிக்குள்  தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர்க ளைப் பதிவு செய்துக்கொள்ளலாம். தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலை வர், மீன்வள விரிவாக்கம், பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி, தொலைபேசி: 0461 2340554, அலைபேசி: 99944 50663, 94431 26894. மின்னஞ்சல் : sujathkumar@tnfu.ac.in

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது

 திருநெல்வேலி, பிப். 4-  திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்க ளில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை யையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை  சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை  பெய்தது. இந்த மழை காரணமாக மணி முத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல களக்காடு தலை யணையிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் தலையணை மற்றும் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக் கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மலைப் பகுதியில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் குறையவில்லை. இதனால் சனிக்கிழமை  அருவிப் பகுதிக்குச் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் சனிக்கிழமை நில வரப்படி அதிகபட்சமாக ஊத்து, நாலு முக்கு உள்ளிட்ட இடங்களில் ஐந்து செ.மீ,.  மழை பெய்துள்ளது. மாஞ்சோலை யில் 32 மில்லிமீட்டர், காக்காச்சியில் 40, மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, முக்கூடல், நாங்குநேரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கன்னடியன் கால் வாய், களக்காடு, கொடுமுடியாறு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது.  வடகிழக்குப் பருவமழை திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு வடகிழக்குப் பருவ மழை குறைவாகவே பெய்துள்ளது.  இத னால் மாவட்டத்தில் உள்ள 1,100 குளங்க ளில் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75.10 அடியாக உள்ளது.  அணையில் 33.57 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் அணையில் 115.60 அடி நீர் இருப்பு இருந்தது. (70.65 சதவீதம்) தற்போது அதில் இருந்து பாதியாக நீர் இருப்பு குறைந்துள்ளது.  கடந்தாண்டு சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 115.71 அடியாக இருந்த நிலை யில் தற்போது 77.30 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்தாண்டு இதே நாளில் 88.54 சத வீதம் நீர் இருப்பு இருந்த நிலையில், இந்தாண்டு  48.13 சதவீதமே உள்ளது.  வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளிலும் கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு நீர் இருப்பு  பாதியாகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக திருநெல்வேலி, தென் காசி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் இந்தாண்டு நெல் சாகுபடி வெகுவாகக் குறைந்துவிட்டது.

திருச்செந்தூர் கோவிலில்  ரூ.300 கோடியில் பணிகள்

'தூத்துக்குடி, பிப்.4- திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் நடை பெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகளை அறநிலை யத்துறை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு செய்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத் துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணை ந்து ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகளை மேற் கொண்டு வருகின்றன. இந்தப் பணிகளை ஆய்வு செய்ய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன் திருச்செந் தூருக்கு வந்தார். பின்னர் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர், விரை வாகப் பணிகளை முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, திருச்செந்தூர் உதவி ஆட்சி யர் புகாரி, கோவில் இணை ஆணையர் கார்த்திக், மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் வட்டாட்சியர் சுவாமிநாதன் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.