districts

img

இந்து முன்னணி விநாயகர் ஊர்வலத்தில் பெண் போலீஸ் அதிகாரி மீது வேட்டியை விசி ரகளை

திண்டுக்கல், செப்.2- வத்தலகுண்டு அருகே இந்து முன்னணியினர் விநாய கர் ஊர்வலத்தில் தொண்டர்கள் வேட்டியை அவிழ்த்து பெண் இன்ஸ்பெக்டர் மீது வீசி ரகளையில் ஈடுபட்ட னர்.  திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. வாகனத்தில் பாடல்களை அலறவிட்டு தொண்டர்கள் ஆடிக்கொண்டு வந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் இந்து முன்னணி யினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஊர்வலத்தில் வந்த தொண்டரில் ஒருவர் தனது வேட்டியை அவிழ்த்து சுழற்றி பெண் காவல் ஆய்வாளர்  மீது விழும்படி வீசினார். அந்த பெண் காவல் ஆய்வாளர் மனம் நொந்து ஒதுங்கிச்சென்றுவிட்டார். இந்து முன்னணியினரின் இந்த செயலைப் பார்த்த மக்கள் முகம் சுழித்தனர்.