districts

img

கழிவுநீரை அகற்ற நிரந்தர திட்டமில்லாத மாநகராட்சி

மதுரை, ஆக.14-  மதுரை வைகையாற் றில் ஓபுளா படித்துறை தென் கரை சாலையில் தேங்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீரை அகற்ற மாநகராட்சி நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை வைகையாற்றின் தென்கரைப் பகுதியான ஓபுளா படித்துறையிலிருந்து சந்தப்பேட்டை வரை உள்ள சாலையில்  பாதாளச் சாக் கடை கழிவுநீர் நீண்ட நாட்க ளாக வெளியேறி குளம் போல் தேங்கி நிற்கிறது இத னால் மக்கள் நடந்து செல்வ தற்கும் வாகன ஓட்டிகள் வாக னங்களை ஓட்டிச் செல்வ தற்கும் சிரமப்படுகின்றனர். கழிவு நீரால் சுகாதாரச் சீர்கேடும் தொடர்கிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி கள் மாமன்ற உறுப்பினர்களி டம் தெரிவித்தும் நடவடிக் கை இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர் மக்கள்.