திருவில்லிபுத்தூர் நகர்மன்ற துணைத் தலைவர் மீது பாஜக நிர்வாகி தாக்குதல் சிபிஎம் கண்டனம்- கைது செய்ய வலியுறுத்தல்
திருவில்லிபுத்தூர், ஆக.3- திருவில்லிபுத்தூர் நகர் மன்ற துணைத் தலைவரை தாக்கிய பாஜக நிர்வாகி மற்றும் அவருடன் சேர்ந்து தாக்கிய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் கே.அர்ஜுனன் வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் 17வது வார்டு ஊரணிபட்டியில் புதன்கிழமையன்று அதே வார்டு திமுக கவுன்சிலரும், நகர்மன்ற துணைத் தலைவருமான செல்வ மணியை பாஜக ஓ .பி. சி அணியின் நகர பொதுச்செய லாளரான சிவப்பிரகாசம் மற்றும் ஆறுமுகம், முனீஸ்வரன், கருப்பையா, கருப்பையா என்ற கருப்பசாமி, சௌந்தர ராஜன் உள்ளிட்டோர் தாக்கினர். இதில் காயமடைந்த செல்வமணி திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி நகர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்துள்ளார் வழக்குப் பரிந்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலை கண்டித்துள்ள சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே. அர்ஜுணன் விடுத்துள்ள அறிக்கையில், திருவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவரை தாக்கிய பாஜக ஓபிசி நகர பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் மற்றும் அவ ருடன் சேர்ந்து தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நத்தம் அருகே டிராக்டர் மீது கார் மோதி விபத்து- ஒருவர் பலி
நத்தம், ஆக.3- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கந்தசாமி (55).இவர் குடும்பத்தினருடன் தனது காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு. நத்தம் வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். காரை அவரது மகன் சிவனேசன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் திண்டுக் கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீடு விலக்கு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதியது. இதில் காரில் இருந்த கந்தசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை நத் தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரில் வந்த அவரது மனைவி கெஜலட்சுமி, மகன் சிவனேசன், மகள்கள் சுமதி, சித்ரா ஆகியோர் பலத்த காயங்களுடன் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளிமந்தையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஒட்டன்சத்திரம், ஆக.3- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் பகுதி யில் நாளை மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே உள்ள கள்ளிமந்தையம் துணை மின்நிலையத்தில் நாளை (5.8.2023) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதை யொட்டி கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுன் டன்வலசு, பொருளுர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் மற்றும் சுற்றுப்புற குக்கிரா மங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை, கள்னிமந்தையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்தனமுத்தையா தெரிவித்துள்ளார்.
ஒன்றாம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியர் மீது வழக்கு
விருதுநகர், ஆக.3- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ளது காடனேரி. இப்பகுதியைச் சேர்ந்த சிலம்பர சன்-தனலட்சுமி தம்பதியின் மகன் கவின்(6). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பு ஆசிரியர் டேவின்மோகன்சிங் மாண வனை கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனலட்சுமி நத்தம்பட்டி காவல்நிலை யத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் மீது போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல்லில் கொளுத்திய வெயில்: மக்கள் அவதி
திண்டுக்கல், ஆக.3- திண்டுக்கல்லில் 38 டிகிரி செல்சியசில் கொளுத்திய வெயில் மற்றும் 19 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கொடைக்கானல் மலை, தாண்டிக்குடி, ஆட லூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளை அர ணாகக்கொண்டு அமைந்துள்ள நகர மாகும். மற்ற மாவட்டங்களைவிட இங்கு வெப்பம் சற்று தணிந்தே இருக்கும். எனவே இங்குள்ள கொடைக்கானல் மலைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பொதுவாக ஏப்ரல். மே மாதங்களில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படும். கத்திரி வெயில் போன்ற சுட் டெரிக்கும் வெயிலும் மே மாதத்தில் தான் வரும். வெப்ப சலனம் மற்றும் புவி வெப்ப மயமாதல் காரணமாக வெயில் அடிக்கக் கூடிய ஏப்ரல் மே மாதங்களில் சாரல் மழை பெய்தது. ஜூலை ஆகஸ்ட் மாதத்தில் வெயில் தணிந்து பலத்த காற்று வீசும். இந்த காலக்கட்டத்தில் வெயில் கத்திரி வெயில் காலத்தை விட கடுமையாக உள்ளது. இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். கடந்த 3 நாட்களாக 37 டிகிரி, 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் என உயர்ந்து காணப்படுகிறது. அடுத்த வாரம் செவ் வாய்க்கிழமை வரை 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் நீடிக்கும் என வானியல் ஆய்வு கள் கூறுகின்றன. இன்றைய வெப்ப நிலை யில் மழை வருவதற்கு 2 விழுக்காடு வாய்ப்பு உள்ளது. வியாழனன்று திண்டுக்கல் மாவட்டத்தில் 19 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இன்றும் 19 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகிறது. வெயில் தாக்கம் காரணமாக பலருக்கு தலைவலி உள்ளிட்ட உபாதைகளும் ஏற்படுகின்றன.
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: காவல்துறை ஆணையாளரிடம் மாதர் சங்கம் புகார் மனு
மதுரை, ஆக.3- மதுரை, ஆரப்பாளையம், ஞானஒளிவுபுரம் காளி யம்மன் கோவில் தெரு, வாய்க்கால்கரை சந்து பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (38). இவர் இதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிகள் இரு வருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக பெற்றோர்களிடம் சிறுமிகள் தெரிவித்த தையடுத்து, மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர். அதேபோல் மதுரை சந்தைப்பேட்டை, வெங்கட நாயுடு தெருவைச் சேர்ந்த சேஷையா மகன் ஆனந்த் (40). இவர் நடத்தி வரும் பூக்கடையில் பணிபுரியும் ஊழியர் ஒரு வரின் மகளை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்துவந்தார். மேலும் கைப்பேசியில் ஆபாசமாக படமெடுத்து அதை இணையதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி தொடர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். தற்போது கல் லூரியில் படித்து வரும் அந்த மாணவி இது தொடர்பாக மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில் ஆனந்த் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த இரண்டு சம்பவம் குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் அடிப்படையில், இரண்டு பேரையும் கைது செய்து சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பாக மாநிலச் செயலாளர் ஆர். சசிகலா, மாவட்ட தலைவர் ஆர்.லதா, மாவட்டச் செயலா ளர் மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் காவல்துறை ஆணையாளரிடம் புத னன்று மனு அளித்தனர்.
பாலியல் பலாத்கார வழக்கில் அதிமுக கவுன்சிலருக்கு ஜாமீன் ரத்து
மதுரை, ஆக.3- சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பரமக்குடி அதிமுக கவுன்சிலருக்கு வழங் கிய ஜாமீன் உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி 3-வது வார்டு அதிமுக கவுன் சிலர் சிகாமணி. கடந்த ஆண்டு இவர், பிர பாகரன், ராஜாமுகம்மது ஆகியோருடன் பார்த்திபனூரில் ஓர் அறையில் வைத்து 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சிகாமணி, பிரபா கரன், ராஜா முகமது, கயல்விழி, அன்ன லட்சுமி ஆகிய 5 பேரையும் கைது செய்த னர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசார ணைக்கு மாற்றப்பட்டது. இதில் சிகா மணிக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் மதுரை உயர்நீதிமன்ற கிளை யில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந் தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜ ராகி, சிகாமணிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முர ணாக உள்ளது என்று வாதாடினார். விசாரணை முடிவில், பரமக்குடி அதி முக கவுன்சிலர் சிகாமணிக்கு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர் மீதான வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.