கடமலை அருகே மின்கம்பத்தில் பைக் மோதி சிறுவன் பலி
கடமலைக்குண்டு, ஜூன் 8- தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கட மலைக்குண்டு அருகே உள்ள சிதம்பரவிலக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாவீரன் (வயது 38). இவருடைய மகன் கிருஷ்ணேஸ்வரன் (9). கோம்பைத்தொழு அரசு ஆரம்ப பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். வியாழக்கிழமை காலை மாவீரன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவரது மகன் கிருஷ்ணேஸ்வரனை சிகிச்சைக்காக பைக்கில் கடமலைக்குண்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறு வனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் ஒரே பைக்கில் சிதம்பரவிலக்கு கிராமத்திற்கு சென்றனர். பைக்கில் முன்புறத்தில் சிறுவன் அமர்ந்திருந்தார். கட மலைக்குண்டு டாஸ்மாக் கடையை அடுத்துள்ள பழங்குடி யினர் காலனி பகுதியில் உள்ள ஆபத்தான சாலை வளை வில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலை தடு மாறி கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் பைக்கில் முன்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணேஸ்வரன் மின்கம்பத்தின் மீது தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தான். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்து தொடர்பாக கடமலைக்குண்டு மின் நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய அதிகாரி கள் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டித்தனர். இதை யடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு போலீ சார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாவீரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இதற்கிடையே மின்வாரிய பணியாளர்கள் சேத மடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய மின்கம்பத்தை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி அருகே பாம்பு கடித்து சிறுமி, மூதாட்டி பலி
தேனி, ஜூன் 8- தேனி அருகே இரு வேறு சம்பவங்களில் பாம்பு கடித்து சிறுமி, மூதாட்டி உயிரிழந்தனர். தேனி அருகே டொம்புசேரி கிராமத்தை சேர்ந்தவர் முரு கன். இவரது மகள் சிவரஞ்சனி (15).இவர் போடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தோட்டத்தில் வேலை பார்த்து வரும் தனது தாயாருக்கு சாப்பாடு கொடுக்க தோட்டத் திற்கு சென்றுள்ளார் .அப்போது அவரை பாம்பு கடித் துள்ளது. உடனடியாக டொம்புசேரி ஆரம்ப சுகாதார நிலை யத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி வியாழனன்று காலை உயிரிழந்தார் .இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி அருகே குண்டல்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜக்கையன் மனைவி வீரசக்கம்மாள் (59).இவர் சம்பவ நாளில் தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்த போது பாம்பு கண்டித்துள்ளது .உறவினர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழனன்று உயிரிழந்தார். இது குறித்து வீரபாண்டி காவல்நிலை யத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
போடியில் செயற்கை சாயம் பூசிய 2 டன் ஏலக்காய் பறிமுதல்
தேனி, ஜூன் 8- தேனி மாவட்டம், போடி பகுதியில் உள்ள ஏலக்காய் சுத்திகரிப்பு நிறுவன கடைகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து உணவு பாது காப்பு அலுவலர்கள் சோதனை செய்து 3 டன் ஏலக்காயை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் புதன் கிழமை மாலை யில் மீண்டும் போடி பகுதியில் உள்ள 5 கடைகளில் திடீர் சோதனை செய்தனர். இதில் இரண்டு கடைகளில் இருந்த ஏலக்காய்களை சோதனை செய்ததில் செயற்கை நிறமூட்டிகள் பயன் படுத்தியிருந்தது தெரிந்தது. இதனையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன், போடி உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா ஆகியோர் செயற்கை நிற மூட்டி பயன்படுத்தப்பட்ட 2 டன் ஏலக்காயை பறிமுதல் செய்தனர். இதில் மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
சு.வெங்கடேசன் எம்.பி.இன்று மக்கள் சந்திப்பு இயக்கம்
மதுரை, ஜூலை 8- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஜூன் 9 அன்று காலை 9. 30 மணிக்கு மக்கள் சந்திப்பை தொடங்குகிறார். மதுரை மாநகராட்சி 29, 30, 41, 42, 43, 49, 88 ஆகிய வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் காமராஜர் சாலையில் உள்ள மேனகா ராமலிங்கம் திருமண மண்ட பத்தில் எம்.பி.யை சந்தித்து தங்களுடைய பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவி கள் குறித்து மனுக்களை வழங்கி தெரிவிக்கலாம். பிற்பகல் 2 மணியளவில் பாலரெங்காபுரம், வைர மணி திருமண மண்டபத்தில் 44, 45, 46, 47, 48, 53, 85, 86 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் மனுக்களை வழங்கி குறைகளை தெரிவிக்கலாம்.
சிபிஎம் புதிய கிளைகள் அமைப்பு
மதுரை, ஜூன் 8- மதுரை மாநகராட்சியில் ஓட்டுனராக பணிபுரியும் 22 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இதற்கான அமைப்புக் கூட்டம் சிஐடியு மாநகர் மாவட் டக்குழு அலுவலகத்தில் வைரமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ம.பாலசுப்பிரமணி. இடைக்கமிட்டி செயலாளர் எஸ். சந்தியாகு ஆகியோர் கலந்துகொண்டனர் மாநகராட்சி ஓட்டுநர்கள் 1 ஈவது கிளை செயலாள ராக பி. மந்திரமூர்த்தி. 2 ஆவது கிளை செயலாளராக பி. ராஜசேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கொடி கம்பம் வைக்க எதிர்ப்பு சாலை மறியல் -11 பேர் மீது வழக்கு
தேனி, ஜூன் 8- போடி அருகே திம்மி நாயக்கன்பட்டியில் காளியம்மன் கோவில் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் கொடி கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கொடி கம்பம் அகற்றப்பட வில்லை. இந்த நிலையில் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போடி தாலுகா காவல்துறையினர் அங்கு சென்று அங்கிருந்த இரண்டு கொடி கம்பங்களை அகற்றினர். இதனையடுத்து சாலை மறியல் கை விடப்பட்டது. இந்த நிலையில் சட்டவிரோதமாக ஒன்று கூடி சாலை மறியல் செய்து, பொது அமைதிக்கு இடையூறு செய்த தாக மார்க்கையன்கோட்டை வருவாய் ஆய்வாளர் சுகன்யாதேவி புகார் அளித்தார். அதன் பேரில் திம்மி நாயக்கன்பட்டி சேர்ந்த ராமர், ராஜேஷ், விஜயன், வேணி, சுமதி, பழனியம்மாள், செல்லத்தாய், பிரேமா, காளி தாஸ், முருகேஸ்வரி மற்றும் சிலர் மீது போலீஸார் புதன் கிழமை இரவு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாளையம், பெரியகுளத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் முகாம்
தேனி, ஜூன் 8- தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம்,பெரியகுளம் வருவாய் கோட்டங்களின் கோட்ட அளவிலான ஜுன் 2023-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் உத்தமபாளையம்,பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சி யர் தலைமையில் விவசாய மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களால் ஜூன் 9 அன்று காலை 11 மணியள வில் நடைபெற உள்ளது. எனவே, அதுசமயம் உத்தமபாளையம் கோட்டத்தில் உள்ள அனைத்து விவசாய பெருமக்களும் விவசாய குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு கண்டு பயன்பெறுமாறு உத்தமபாளையம், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சி யர்கள் தெரிவித்துள்ளனர்.
சிபிஎம் போராட்ட அறிவிப்பால் சேவைச் சாலையில் ஓடிய கழிவு நீர் அகற்றம்
விருதுநகர், ஜூன் 8- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முதல் சூலக்கரை வரை செல்லும் சேவைச் சாலையில் ஓடிய கழிவு நீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பால் தடுக்கப்பட்டது. விருதுநகர்-சாத்தூர் 4 வழிச் சாலை யோரத்தில் சூலக்கரை பகுதி உள்ளது. கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் மன்னர் திருமலை நகர், முல்லை நகர் ஆகியவை உள்ளன. இந் நிலையில், இங்கு கடந்த 6 மாதகாலமாக கழிவு நீர் சேவைச் சாலையில் ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அதை அகற்றக்கோரி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வித அசைவும் ஏற்படவில்லை. இதையடுத்து, சிபிஎம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை நிர்வாகம் உடனடி யாக தலையீடு செய்தது. சேவைச் சாலையின் ஓரத்தில் இருந்த அடைப்புகள் அகற்றப்பட்டது. இதனால் கழிவு நீரானது, மழை நீர் வடிகால் வழி யாக திருப்பி விடப்பட்டது. இதனால் சாலை யில் கழிவு நீர் செல்வது தடுக்கப்பட்டது. இந்தநிலையில், சிபிஎம் சார்பில் அறி விக்கப்பட்ட பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டதோடு, மக்கள் மத்தியில் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி அறிவிப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் எம். அசோகன், சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர். முத்துவேல், ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் ஜெ .ஜே .சீனி வாசன், ஏ.எம்.மாரி, கிளைச் செயலாளர் கள் ஏ.நாகேஸ்வரி, எம்.ஆறுமுகம் மற்றும் வி.கற்பூரம் உட்பட கலந்து கொண்டனர்.