விருதுநகர், ஏப்.28- மாவட்டத் தலைநகரான விருது நகரில் உள்ள புதிய பேருந்து நிலை யம் எப்போது செயல்படும் என நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பி னர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி னர். விருதுநகர் நகராட்சியில் சாதாரண மற்றும் அவசர கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாத வன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு, பொறியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவா தம் வருமாறு : புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வருமா? மாவட்டத் தலைநகரான விருது நகருக்குள் ஏன்? அரசுப் பேருந்து கள் வர மறுக்கிறது. மாவட்டத்தில் இராஜபாளையம், அருப்புக் கோட்டை ஆகிய ஊர்களில் இரு பேருந்து நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், விருதுநகரில் மட்டும் புதிய பேருந்து நிலை யம் 31 வருடங்களாக இயக்கப்படா மல் இருப்பது ஏன்? என சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக் குமார் கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து பேசிய உறுப்பினர் கலையரசன், புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து கள் வருமா? வராதா? எனக் கூறுங்கள். தற்போது ஏராளமான நிதியை அதற்காக செலவு செய்து விட்டோம். பேருந்து வராது எனில் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தலைவர், தற்போது பொது மக்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. பொது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார். 2 தீர்மானங்கள் ரத்து இதையடுத்து, நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம் ரூ.18 லட்சத்து 23 ஆயிரத்து 171 மற்றும் ரூ.13லட்சத்து 74 ஆயி ரத்து 959 தொழில்வரி ஆகிய வற்றை ரத்து செய்யக் கூடாது என பெரும்பான்மையான உறுப்பி னர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, இரு தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மாரியம்மன் கோவில் திருவிழா வின் போது தெப்பம் தெற்கு, மேற்கு பகுதியில் கடை அமைத்தவர்க ளிடம் ரூ.12 ஆயிரம் முதல் 18 ஆயி ரம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றுள் ளது. ஏன்? முறையாக பொது ஏலம் விடவில்லையென உறுப்பினர் ஆறுமுகம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து பேசிய தலை வர், கடந்த 7 வருடங்களாக டென்டர் விடப்படவில்லை. வரும் ஆண்டு பொது ஏலம் விடப்படும் என தெரிவித்தார். அதன்பிறகு பேசிய உறுப்பினர் ஆறுமுகம், நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தக் கூடாது. இழப்பு ஏற்பட்டால் மன்றம் கலைக்கப்படும். பின்பு தலை வரும், உறுப்பினர்களுடன் தான் அமர நேரிடும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட உறுப் பினர் இந்திரா, மூத்த உறுப்பி னரான ஆறுமுகம், தலைவரை இப்படிக் கூறலாமா? என தெரி வித்தார். இதையடுத்து, இருவ ருக்குமிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கனவே நகராட்சியால் டென்டர் விடப்பட்ட பணிகள் ஏன்? உறுப்பினர்களின் பார்வைக்கு மன்ற பொருளில் வைக்க வில்லை. அதை ஏன்? நிறுத்தி வைத்துள்ளீர்கள். அதற்கு அதிகா ரம் உள்ளதா? என உறுப்பினர்கள் ஜெயக்குமார், ஆறுமுகம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலை வர், கோப்புகள் தன்னிடம் வர வில்லையென தெரிவித்தார். இதையடுத்து பேசிய உறுப்பி னர் ஆறுமுகம், இங்கு என்ன நிர்வாகமா நடக்கிறது. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய 15 நாட்க ளில் டென்டர் விட வேண்டும் இது தான் விதிமுறை. ஏன்? விதிமுறை மீறப்படுகிறது என தெரிவித்தார். பின்பு, 3 மாதங்களுக்குள் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்க ளுக்கு ரூ.50 அபராதம் விதிப்பதற்கான தீர்மானத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நாள்தோறும் குடிநீர் வழங்கி விட்டு, இதுபோன்ற அபரா தத் தொகையை வசூலியுங்கள். மாதத்தில் 3 முறை மட்டுமே குடிநீர் வழங்கி விட்டு அபராதம் வசூ லிப்பதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர். பின்பு பேசிய ஆணையாளர் இத்தீர்மானம் தமிழக அரசால், அனைத்து நகராட்சிகளுக்கும் கொண்டு வரப்பட்ட தீர்மானம் என தெரிவித்தார். இதையடுத்து அத்தீர்மானம் பல உறுப்பினர்க ளின் வாக்குவாதத்திற்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.