போபால் மோடி பிரதமர் ஆனபின் மக்கள் நலன் சார்ந்த பணிகளை விட வகுப்புவாத அரசியல் ஆதாயத்திற்காக மசூதிகளை, இந்து கோவிலாக மாற்றும் வேலையை மட்டுமே ஒன்றிய பாஜக அரசு தீவிரமாக மேற் கொண்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்த அயோத்தி பாபர் மசூ தியை ராமர் கோவிலாகவும், வாரணாசி யில் உள்ள ஞானவாபி மசூதியை காசி விஸ்வநாதர் கோவிலாகவும் தனது கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல்துறை மூலம் மோடி அரசு மாற்றிய நிலையில், தற்போது பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தின் தாரா பகுதியில் உள்ள போஜ்சாலா மசூதியையும் இந்து கோவிலாக மற்றும் வேலையில் மோடி அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. போஜ்சாலா மசூதி முஸ்லிம் மக்க ளுக்கு சொந்தமானது என்ற நிலையில், மசூதி கட்டிடம் 12-ஆம் நூற்றாண்டில் தாரா மன்னர் கட்டிய சரஸ்வதி கோவிலை முக லாய மன்னர்கள் மசூதியாக மாற்றியதாக கூறி பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந் துத்துவா அமைப்புகள் மத்தியப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தாலும், மசூதி கள ஆய்வு நடத்த தடையில்லை என உச்சநீதி மன்றம் கூறாதது சர்ச்சையை ஏற்படுத்தி யது. உயர்நீதிமன்ற கள ஆய்வு உத்தர வின்படி மார்ச் 22 அன்று மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல்துறை மசூதியில் கள ஆய்வை தொடங்கியது. 98 நாட்களாக நடத்தப்பட்ட இந்த கள ஆய்வின் ஆய்வறிக்கை இந்தூர் உயர்நீதி மன்றக் கிளையின் அமர்வின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. சுமார் 2,000 பக் கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் போஜ்சாலாவில் இந்து கோவில் இருந்த தற்கான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது.