மதுரை, ஜூன் 13- எஸ்சி/எஸ்டி மாணவர்களின் உயர்கல்விக்காக அரசு ஒதுக்கியிருந்த ரூ.927 கோடியை மீண்டும் அத்துறை மாண வர்களின் உயர்கல்விக்காகவும் நல திட்டங்களுக்காகவும் செலவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கார்த்திக் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் உயர் கல்வி பெறுவதற்கான பொருளாதார தேவை, முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட வில்லை. இந்நிலையில் அவர்களின் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அத்துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 8 ஆண்டுகளில், வெளிநாடுகளில் பி.எச்டி., படிப்பதற்கான உதவித் தொகை திட்டத் திற்கு 18 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ள னர். இவர்களில் 3 மட்டுமே தேர்வு செய்யப் பட்டு, அவர்களுக்கு 2.65 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில், 99 லட்சம் ரூபாய் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களுக்காக ஒதுக்கிய தொகையில் மட்டும், 927 கோடி ரூபாய் பயன்படுத்தப் படாமல் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட் டுள்ளதாக, இந்தத் துறை தகவல்கள் அளிக் கின்றன. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த தொகையை மீண்டும் பெற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின மாணவர்களின் உயர்கல்விக்கு பயன்பெறும் வகையில் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிர காஷ், ஆனந்தி அமர்வு முன்பாக திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கும் வகை யில் தனி இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. பள்ளிகளிலும், நாளிதழ்களி லும் அவை தொடர்பான செய்தி வெளி யிடப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதி பதிகள், தனி இணையதளத்தை உருவாக் கும் பணியை விரைவாக மேற்கொள்ள அறி வுறுத்தி, வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர்.