மதுரை, மார்ச் 6- சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், தொழிற் சங்கவாதி, வழக்கறிஞர், கைரேகைச் சட்டத்தை எதிர்த்து வழக்காடி வெற்றி பெற்றவர் ஜான்ஜோசப். இவ ரது பெயர் பேச்சு வழக்கில் ரோசாப்பூதுரை என்றாகி யது. மதுரை மாவட்டத்தில் பலருக்கும் இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாரிஸ்டர் ஜான் ஜோசப் பின் 85-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று மதுரை தமிழ்நாடு சிறுபான்மை மக் கள் நலக்குழு சார்பில் கடைப் பிடிக்கப்பட்டது. மதுரை யானைக்கல்லில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன், என்.கணேசமூர்த்தி, எம். ஜான்சன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், அருட்தந்தையர்கள் பென டிக்ட் பர்னபாஸ், எஸ்.லாரன்ஸ், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், செல்வபிரிதா உள்ளிட்ட பலர் மாலையணி வித்து மரியாதை செலுத்தி னர்.