districts

தமிழ்நாட்டில் 8,690 ஏரிகள் நிரம்பின

சென்னை,டிச.7- தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 2,989  ஏரிகள் 75 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பி  உள்ளது. இதுகுறித்து மாநில அவசர  கட்டுப்பாட்டு மையம், வடகிழக்கு பருவமழை தொடர்பாக வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:- வடகிழக்கு பருவமழை 1-10-2021 முதல் 7-12-2021 வரை 683.4 மில்லி மீட்டர்  பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவான 385.9 மில்லி மீட்டரை விட 77  விழுக்காடு கூடுதலாகும். சென்னை மாநகராட்சி பகுதியில் 257 பேர் 3 நிவாரண முகாம்களில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங் களில் 2,156 பேர் 36 நிவாரண  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள னர். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி  உள்ளது. 2,989 ஏரிகள் 75 விழுக் ்காட்டிற்கு மேல் நிரம்பி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 90 விழுக்காடு நீர் தேக்கங்களின் மொத்த கொள்ள ளவான 224.297 டி.எம்.சி.யில் 212.009 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இது 94.52 விழுக்காடாகும்.

சென்னை மாநகராட்சி பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள 6 இடங்களில் அதிக திறன் கொண்ட 26 பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது. இது வரை 19,740 மருத்துவ முகாம்கள் மூலம் 6,48, 689 பேர் பயன் அடைந்துள் ்ளனர். மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் 918 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. 54 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 33 விழுக்காடு பயிர்கள் சேதம் இதுவரைக்கும் 47 கால்நடைகள் இறந்துள்ளன. 633 குடிசைகள் பகுதி யாகவும், 55 குடிசைகள் முழுமையா கவும் ஆக மொத்தம் 688 குடிசைகளும், 100 வீடுகள் பகுதியாகவும், 15 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 115 வீடுகள் சேதமடைந்துள்ளன. இது வரை 1,27, 811 ஹெக்டேர் வேளாண்மை பயிர்களும் 16,447 ஹெக்டேர் தோட்டக் ்கலை பயிர்களும், 33 விழுக்காட்டிற்கு மேல் பாதிப்படைந்துள்ளன. மாநில அவசரக் கட்டுப் ்பாட்டு மையத்திற்கு (கட்டணமில்லா தொலைபேசி எண்.1070) வரப்பெற்ற 7227 புகார்களில் 6,937 புகார்கள் தீர்வு  செய்யப்பட்டுள்ளன. மாவட்ட அவசரக்  கட்டுப்பாட்டு அறைக்கு (கட்டணமில்லா தொலைபேசி எண். 1077) வரப்பெற்ற 7040 புகார்களில் 6,958 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது