மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் டி.நந்தகோபால் 75வது பிறந்த நாளையொட்டி செவ்வாயன்று (ஜன.3) கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன், ஆலந்தூர் பகுதிச் செயலாளர் என்.வெங்கடேசன், நந்தகோபால் இணையர் என்.சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.