பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66-ஆவது நினைவு தினம் அவரது நினைவிடத்தில் திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், கே.ஆர்.பெரிய கருப்பன், பி.மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், தில்லி பிரதிநிதி விஜயன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.