விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 610 மி.மீ மழை
விருதுநகர், நவ.9- விருதுநகர் மாவட்டத்தில் கடந்த புதனன்று இரவு பல்வேறு இடக்ஙளில் 610.10 மி.மீ அளவுக்கு மழை பெய்தது. அதன் விபரம் வருமாறு: விருதுநகர் 88.20 மி.மீ, வத்ராப் 93.60 மி.மீ, திருச்சுழி 23, இராஜபாளையம் 88, காரியாபட்டி 46, திரு வில்லிபுத்தூர் 64, சாத்தூர் 25, சிவகாசி 24.60, பிள வக்கல் 41.20, கோவிலாங்குளம் 63.90, வெம்பக்கோட்டை 16.20, அருப்புக்கோட்டை 36 மி.மீ என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதன் மொத்த சராசரி 50.84 ஆகும்.
3,900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 4 பேர் கைது
சிவகங்கை, நவ.9- சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவ டியில் உணவு வழங்கல் பறக்கும்படை தாசில்தார் மைலா வதி தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது இராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு சென்ற மினி சரக்கு வண்டியை சோதனையிட்டதில், 93 மூட்டைகளில் 3,900 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் பாண்டி வேல் (25), கார்த்திக் (25), ராம்கி (23), ஐராவத நல்லூரைச் சேர்ந்த மணிகண்டன் (23) ஆகிய 4 பேரை பிடித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையின ரிடம் ஒப்படைத்தனர்.
மடப்புரம் கோயில் உண்டியல் எண்ணும் பணி: நகையை திருடிய கோயில் அதிகாரி மீது புகார்
சிவகங்கை, நவ.9- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரத்தில் உள்ள அடைக் கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணியின்போது 10 பவுன் தங்க கொலுசை திருடியதாக செயல் அலு வலர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மடப்புரம் காத்த அய்ய னார், பத்திரகாளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நாற்பது நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். இதன்படி, புதன்கிழமை அன்று உண்டி யல் எண்ணும் பணி நடை பெற்றது. இராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், தக்கார் பிரதிநிதி மூவலிங் கம், செயல்அலுவலர் வில்வ லிங்கம் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்ற பணி யில், கோயில் ஊழியர்கள், மதுரை அன்னபூர்ணா சேவா பக்தர்கள் ஈடுபட்டனர். இதில், 9 நிரந்தர உண்டி யல்களில் ரூ.12 லட்சத்து 14 ஆயிரத்து 686 ரூபாயும், தங்கம் 291 கிராம், வெள்ளி 173 கிராம் இருந்தது. அப்போது 10 பவுன் இரண்டு தங்க கொழுசு காணாமல் போனது தெரியவந்தது. காணாமல் போன இரண்டு தங்க கொழுசில் ஒன்றை கோயில் செயல் அலுவலர் வில்வமூர்த்தி திருப்பி கொடுத்துவிட்டார். இன்னொரு தங்க செயினை கொடுக்க வில்லை. இது தொடர்பாக அற நிலையத் துறை இணை ஆணையர் பழனிக்குமார் கோயிலுக்கு வந்து விசா ரணை செய்தார். விசாரணை அறிக்கையை சென்னை ஆணையாளர்க்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள் ளார். இப் பிரச்சனை தொடர் பாக கோயில் ஆய்வாளர் அய்யனார் திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். செயல் அலுவலர்க்கு சமன் அனுப்பி விசாரித்து வழக்கு பதிவு செய்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் அய்யம்பாண்டி கூறும் போது, மடப்புரம் கோயி லில் உண்டியல் எண்ணும் போதெல்லாம் திருடு நடந்துள்ளதாக தெரியவரு கிறது. உண்டியல் எண்ணும் போதெல்லாம் என்ன தவறு நடந்ததை என்பதை விசா ரிக்க வேண்டும். இதுகுறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண் டும்’’ என தெரிவித்துள்ளார்.
காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி பலி
தேனி, நவ.9- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் புதனன்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. அதிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி களில் இரவு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் புதனன்று மழை பெய்யும் நேரங்க ளில் காட்டுப்பன்றிகள் விவசாய நிலத்திற்கு வரும் என்ப தால் தெப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் முருகன் (55) மற்றும் அவருடன் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சங்கத்தேவன், கோவிந்தநகரம் பகுதியை சேர்ந்த விஜயராஜ், தெப்பம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கமலை ஆகிய நான்கு பேரும் தெப்பம்பட்டி மலையடிவார பகுதி யில் அமைந்துள்ள அவர்களுடைய கடலை தோட்டத் திற்கு காவலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கூட்டாற்று ஓடையை கடந்தனர். அந்த ஓடையில் இடுப்பளவிற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால், 4 பேரும் கைகளை பிடித்து ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓடையில் தண்ணீர் அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் முருகன் என்பவர் மட்டும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். முருகன் வெள்ளத்தில் இழுத்து சென்று அங்கிருந்த செக்டேம் பகுதியில் மண்ணால் மூடப்பட்டு உயிரிழந்தார். பின்னர் வெள்ளத்தில் இருந்து தப்பி சென்றவர்கள் ராஜதானி காவல் நிலையத்திற்கு தக வல் தெரிவித்தனர். இதையடுத்து காவல், ஆண்டிபட்டி தீயணைப்பு துறை யினர் சுமார் 6 மணி நேரம் தேடுதலில் ஈடுபட்டு, இரவு 2 மணி யளவில் முருகனின் உடலில் மீட்டு தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜதானி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
நியோமேக்ஸ் வழக்கு கோவில்பட்டி நாராயணசாமிக்கு முன் ஜாமீன் மறுப்பு
மதுரை, நவ.9- நியோமேக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கோவில்பட்டி நாராயணசாமிக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிதி நிறுவனமான நியோமேக்ஸ் ப்ராபர்ட்டீஸ் நிறுவனம், பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி பணத்தை முத லீடாக பெற்றதாகவும், உறுதியளித்தபடி பொதுமக்க ளுக்கு உரிய தொகையை திருப்பி அளிக்கவில்லை என்று முதலீட்டாளர்கள் பலர் நியோமேக்ஸ் உள்ளிட்ட துணை நிறுவனங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்த னர். புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நியோமேக்ஸ் இயக்குநர்கள் உட்பட சிலர் கைதாகி உள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த நாராய ணசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். மனுவில், நியோமேக்ஸ் நிதி நிறுவனம் முதலீடு தொடர்பான விவகாரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்த மும் இல்லை. இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்ததற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் 70 வயதுடைய இருதய நோயாளி. எனக்கு முன் ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு வியாழ னன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், மனுதாரர் மீது பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகார் உள்ளது என எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி, மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தேவையான நடவடிக்கைகளை தொடரலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
காவலர்களை தாக்கி தப்ப முயன்ற குற்றவாளி: துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை
மதுரை, நவ.9- மதுரையில் ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் மகளிடம் 3 பவுன் நகையை பறித்த சம்பவத்தில் தேடப்பட்ட குற்ற வாளி காவல்துறையினரை தாக்கி தப்ப முயற்சித்த போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மதுரை தபால் தந்திநகர் லதா (44) பைபாஸ் ரோடு பிரபல ஸ்வீட்ஸ் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் நவம்பர் 4 அன்று இரவு வேலை முடிந்து விட்டு தன்னு டைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வரும் போது, தபால் தந்தி நகர் சாலையில் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் அவர் கழுத்தில் அணிந்தி ருந்த நகை பறித்தனர். இதில், வாகனத்தில் இருந்து கீழே விழுந்த லதாவை செயினுடன் ரோட்டில் 50 மீட்டர் துாரம் இழுத்துச்சென்று 3 பவுன் செயினை பறித்துச் சென்றனர். லதா ஓய்வு பெற்ற ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் மகள். இதுதொடர்பாக கூடல்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சம்மட்டிபுரம் ஸ்டீபன்ராஜ் உட்பட இருவரை தேடி வந்தனர். இந்நிலையில், வியாழனன்று மாலை செல்லுார் களத்துப்பொட்டல் பகுதியில் ஸ்டீபன்ராஜ் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அவர்களை தேடிச் சென்ற போது காவல்துறையை கண்டதும் ஸ்டீபன்ராஜ் தப்ப முயன்றார். அவரை பிடிக்க முயன்ற ஆய்வாளர் ரஞ்சித்தை கத்தியால் வெட்டியதில் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் தற்காப்பிற்காக சூட்டதில் ஸ்டீபன்ராஜ் வலது கால் மூட்டுக்கு கீழ் இரு தோட்டாக்கள் பாய்ந்தன. இதைத்தொடர்ந்து குண்டடிபட்ட ஸ்டீபன் ராஜ்சை சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, தொடர்ந்து விசாரணை நடை பெற்ற வருகின்றனர்.
திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல்போக பாசனத்திற்கு வைகை அணையில் இன்று தண்ணீர் திறப்பு
தேனி, நவ.9- திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல் போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாத தால் சில மாதங்களாக வைகை அணையின் நீர்மட்டம் போதிய அளவு உயரவில்லை. இதனால் முதல் மற்றும் இரண்டாம் போகத் துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக பெய்து வருகிறது. இதனால் அணைக்கான நீர்வரத்து வெகு வாய் அதிகரித்து புதனன்று 69 அடியாக (மொத்த உயரம் 71 அடி) உயர்ந்தது. இத னைத் தொடர்ந்து இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் உபரி நீரை வெளியேற்றா ததால் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வந்தது. புதனன்று நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 705கனஅடியாக இருந்த நிலையில் தொடர்மழையினால் வியாழ னன்று 3 ஆயிரத்து 625கனஅடியாக அதி கரித்தது. இதனால் நீர்மட்டம் 70.30அடி யை எட்டியது. முழுக் கொள்ளளவை நெருங்க உள்ள தால் பெரியாறு பிரதான கால்வாய் பாச னப்பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளியன்று இப்பகுதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி கள் கூறுகையில், அமைச்சர் இ.பெரியசாமி வெள்ளியன்று திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல்போக பாசனத்துக்கான நீரை திறந்து வைக்க உள்ளார் என்றனர். இதன்படி வெள்ளிக்கிழமை முதல் நாள் ஒன்றுக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்க ளுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்க ளுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பயனடைய உள்ளன.