districts

இலங்கை கடற்படையினரால் இராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் கைது

இராமேசுவரம், ஜூலை 21-  இராமேசுவரம் மீனவர்  கள் 6 பேரை இலங்கை கடற்  படையினர் வியாழக்கிழமை யன்று கைது செய்தனர்.  இராமநாதபுரம் மாவட் டம், இராமேசுவரம் துறை முகத்திலிருந்து புதன்கிழ மையன்று 539 விசைப்படகு களில் 3 ஆயிரத்திற்கும் மேற்  பட்ட மீனவர்கள் மீன்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்க  சென்றனர். வியாழக்கிழமை யன்று அதிகாலையில் கச் சத்தீவு நெடுந்தீவு அருகே  மீன்பிடித்துக் கொண்டிருக் கும் போது 5 ரோந்து கப்ப லில் வந்த இலங்கை கடற் படையினர் இராமேசுவரம் வேர்க்கோடைச் சேர்ந்த அ.ஆரோக்கியராஜ் (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்  தனர். படகில் இருந்த மீன வர்கள் பாலமுருகன்,(32),டி.அந்தோணி (38), கே.அர்ஜு னன் (23) ஜெ.மடுகு பிச்சை  (45),கே. தங்கப்பாண்டி (55),  ராஜா (21) ஆகிய ஆறு மீன வர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்  றனர். இலங்கை கடற்பகு திக்குள் அத்துமீறி மீன்பிடித் ததாக வழக்கு பதிவு செய் துள்ளனர். மீனவர்கள் 6 பேரை நீரியல்துறை அதி காரிகளிடம் ஒப்படைத்தனர்.  இந்த நிலையில், தங்கச்சிமடத்தை சேர்ந்த எடிசன் என்பவரது படகின் பலகை உடைந்து கடல் தண்  ணீர் புகுந்தது. இதனால் படகு  கடலில் மூழ்க தொடங்கி யது. சக மீனவர்களை உத விக்கு அழைத்து படகில்  இருந்த 7 மீனவர்களை மீட்ட னர். மூழ்கிக்கொண்டிருந்த படகை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.