விருதுநகர், ஜூன் 8- விருதுநகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்குள் புகுந்து கைதிகளை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விக்னேஷ் மற்றும் யுவராஜ். இவர்கள் இருவரும் போலீஸ் பாதுகாப்பு டன் விருதுநகர் மாவட்டச் சிறையிலிருந்து சிகிச் சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு, அவர் களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது. மேற்படி கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் 1. விஜயன் என்ற விஜி (30) 2. பிரபாகரன் என்ற கொடி என்ற அருண் (30) 3. அழகர்சாமி என்ற பெரியவர் (23) 4. சரவணன் என்ற சாமி சரவணன் என்ற சரவண பாண்டி (28) 5. போத்திராஜ் என்ற போத்திராஜன் (24) 6. தங்கமலை (27) ஆகியோர் திடீரென விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்தனர். பின்பு, சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் மற்றும் யுவராஜ் ஆகியோரை கொலை செய்யும் நோக்கில் ஆயு தப்படைக் காவலர்களின் மீது மிளகாய் பொடியை தூவி யதோடு, கொடூர ஆயுதங்களால் விக்னேஷ் மற்றும் யுவ ராஜை தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, அனைவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்நிலையில், கைதான 6 பேர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விருது நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், 6 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறை யிலடைக்க உத்தரவிட்டார்.