districts

img

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் ரூ.5.45 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

சிவகங்கை, பிப்.7-  சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டாவது புத்தகத் திருவிழாவில் ரூ.  5.45 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்ப னையாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன ரெட்டி தெரிவித்தார். புத்தகத்திருவிழாவின் நிறைவு விழா  மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூ தன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் சொந்த செலவில் நான்கு அரசு பள்ளிகளுக்கு ரூ50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்களை பள்ளிக்கு வழங்கினார். முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ரூ.8 லட்சம் மதிப்பி லான புத்தகங்களை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். சிவ கங்கை மாவட்டத்தில் உள்ள கேஸ் விநி யோகஸ்தர்கள் ஒன்று சேர்ந்து ரூ.50 ஆயி ரம் மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கி அரசு பள்ளிகளுக்கு வழங்கினர்.  பல்வேறு பகுதி களில் உள்ள நன்கொடையாளர்கள், உள்  ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்க ளது பங்களிப்பில் நூலகங்கள் மற்றும்  பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்கினர்.  கடந்த ஆண்டு ரூ.3.50 கோடிக்கு புத்தகங் கள் விற்கப்பட்டது.  இந்த ஆண்டு இரண்டா வது புத்தகத் திருவிழாவில்  ரூ.5.45 கோடி யில்  புத்தகம் விற்பனை நடந்திருக்கிறது.  புத்தகத் திருவிழா நடைபெறுவதற்கு இப்பள்ளி வளாகத்தை அளித்த பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியின் செயலர் குமரகுரு, புத்தக திருவிழாவில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பி னருக்கும் ஆட்சியர்  நன்றியை தெரி வித்துக் கொண்டார்.   இவ்விழாவில் மாநில ஊரக வாழ்வா தார இயக்கத் திட்ட இயக்குனர்,  சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர், உதவி ஆணை யர், மாவட்ட ஆட்சியரை நேர்முக உதவி யாளர் தென்னிந்திய புத்தக விற்பனையா ளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செய லாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.