திருச்சூர், பிப். 8- திருச்சூர் கன்னங்குழியில் காட்டு யானை தாக்கியதில் ஐந்து வயது சிறுமி பலியானார். வனவிலங்குகளின் அட்ட காசத்தை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிரப் பள்ளி-ஆனைமலை சாலையில் உள்ள வெறிலப்பாறையில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி யின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் உறுதியளித்துள்ளார். புத்தஞ்சிராவைச் சேர்ந்த நிகிலின் மகள் அக்னிமியா (5). இவர் பிப்.7 திங்க ளன்று மாலை 6.30 மணியளவில் கண்ணம் குழியில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து சிறிது தூரம் தனியாக சென்றார். அப்போது அங்கு யானையைக் கண்ட குடும்பத்தினர் ஓடிச்சென்று குழந்தைய காப்பாற்ற முயன்றனர். அதற்குள் யானை குழந்தையைத் தாக்கியுள்ளது. தடுக்க முயன்ற குழந்தையின் தந்தை நிகில், தாத்தா ஜெயன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சாலக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனைக்கு சென்றடைவதற்குள் அக்மினியா இறந்துவிட்டார்.